தியேட்டர் அனுபவத்தை தரும் ‘பிலிப்ஸ்’ ஆண்ட்ராய்டு தியேட்டர் அனுபவத்தை தரும் ‘பிலிப்ஸ்’ ஆண்ட்ராய்டு ...  அதானி குழுமத்தின் புதிய முதலீடு அதானி குழுமத்தின் புதிய முதலீடு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
நவம்பரிலும் உற்பத்தி பாதிக்கும் ‘மாருதி சுசூகி’ அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2021
19:34

புதுடில்லி:‘செமிகண்டக்டர் சிப்’ பற்றாக்குறையால், நவம்பர் மாதத்தில் வாகன தயாரிப்பு பாதிக்கப்படும் என, மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.

ஹரியானாவில் உள்ள அதன் இரு ஆலைகள் மற்றும், குஜராத்தில் உள்ள ஒரு ஆலை ஆகியவற்றில் உற்பத்தி பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.இது குறித்து, கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:செமிகண்டக்டர் தட்டுப்பாடு காரணமாக, எலக்ட்ரானிக் பாகங்கள் வினியோகம் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.

இதனால் நவம்பரில், குஜராத் மற்றும் ஹரியானா ஆலைகளில் உற்பத்தி பாதிப்புக்கு உள்ளாகும். வழக்கமாக இங்கு தயாராவதில் 85 சதவீதம் அளவுக்கு மட்டுமே உற்பத்தி நடைபெறும்.இவ்வாறு தெரிவித்துஉள்ளது.ஹரியானாவில் உள்ள இரு ஆலைகளின் ஆண்டு உற்பத்தி திறன் 15 லட்சம் வாகனங்கள் ஆகும். குஜராத் ஆலையின் உற்பத்தி திறன் 7.5 லட்சம் வாகனங்கள் ஆகும்.

எலக்ட்ரானிக் சாதனங்களின் தட்டுபாடு காரணமாக, செப்டம்பர் காலாண்டில் 1.16 லட்சம் வாகனங்களை தயாரிக்க இயலாமல் போய்விட்டது.கடந்த காலாண்டின் முடிவில், 2 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர் ஆர்டர்களை நிலுவையில் வைத்துள்ளது. டெலிவரிகளை விரைவுபடுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

கார்கள் நவீனமாகி வருவதை அடுத்து, அவற்றில் செமிகண்டக்டர் சிப் களின் தேவை அதிகரித்து விட்டது. ஆனால் கொரோனா காரணமாக சிப் தயாரிப்பில் சிக்கல்கள் ஏற்பட்டதை அடுத்து, வாகன துறையிலும் அதன் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)