பதிவு செய்த நாள்
30 அக்2021
19:34
புதுடில்லி:‘செமிகண்டக்டர் சிப்’ பற்றாக்குறையால், நவம்பர் மாதத்தில் வாகன தயாரிப்பு பாதிக்கப்படும் என, மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.
ஹரியானாவில் உள்ள அதன் இரு ஆலைகள் மற்றும், குஜராத்தில் உள்ள ஒரு ஆலை ஆகியவற்றில் உற்பத்தி பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.இது குறித்து, கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:செமிகண்டக்டர் தட்டுப்பாடு காரணமாக, எலக்ட்ரானிக் பாகங்கள் வினியோகம் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.
இதனால் நவம்பரில், குஜராத் மற்றும் ஹரியானா ஆலைகளில் உற்பத்தி பாதிப்புக்கு உள்ளாகும். வழக்கமாக இங்கு தயாராவதில் 85 சதவீதம் அளவுக்கு மட்டுமே உற்பத்தி நடைபெறும்.இவ்வாறு தெரிவித்துஉள்ளது.ஹரியானாவில் உள்ள இரு ஆலைகளின் ஆண்டு உற்பத்தி திறன் 15 லட்சம் வாகனங்கள் ஆகும். குஜராத் ஆலையின் உற்பத்தி திறன் 7.5 லட்சம் வாகனங்கள் ஆகும்.
எலக்ட்ரானிக் சாதனங்களின் தட்டுபாடு காரணமாக, செப்டம்பர் காலாண்டில் 1.16 லட்சம் வாகனங்களை தயாரிக்க இயலாமல் போய்விட்டது.கடந்த காலாண்டின் முடிவில், 2 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர் ஆர்டர்களை நிலுவையில் வைத்துள்ளது. டெலிவரிகளை விரைவுபடுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
கார்கள் நவீனமாகி வருவதை அடுத்து, அவற்றில் செமிகண்டக்டர் சிப் களின் தேவை அதிகரித்து விட்டது. ஆனால் கொரோனா காரணமாக சிப் தயாரிப்பில் சிக்கல்கள் ஏற்பட்டதை அடுத்து, வாகன துறையிலும் அதன் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|