பதிவு செய்த நாள்
02 நவ2021
20:04
புதுடில்லி:இந்தியாவில், மெய்நிகர் நாணயங்களில் செய்யப்படும் முதலீடும், முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.இந்தியாவில், மெய்நிகர் நாணயங்களில் 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் மெய்நிகர் நாணயங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு 6,922 கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 75 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது. மெய்நிகர் நாணய ஆராய்ச்சி நிறுவனமான ‘கிரிபேகோ’ மேற்கொண்ட ஆய்வில் இவ்வாறு தெரியவந்துள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின் நிறுவனர் சித்தார்த் சோகானி கூறியதாவது:இந்தியாவில் 10.5 கோடி பேர் அல்லது இந்திய மக்கள் தொகையில் 7.90 சதவீதம் பேர், இத்தகைய ‘டிஜிட்டல் டோக்கன்’களில் முதலீட்டை மேற்கொண்டிருக்கின்றனர். இம்முதலீடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால், அதிகமான பேர் முதலீடு செய்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
மெய்நிகர் நாணயங்களில் முதலீடுகள் அதிகரித்து வருவதற்கு இன்னொரு முக்கிய காரணம், மெய்நிகர் நாணய ‘எக்ஸ்சேஞ்ச்’களில், எஸ்.ஐ.பி., வசதி மற்றும் ‘பிக்ஸட் டிபாசிட்’ திட்டங்கள் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டதாகும்.
இருப்பினும், இந்தியாவில் முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இத்தகைய முதலீடுகள் முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|