அக்டோபரில்  ஏற்றுமதி 42.33 சதவீதம் அதிகரிப்பு அக்டோபரில் ஏற்றுமதி 42.33 சதவீதம் அதிகரிப்பு ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
75 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மெய்நிகர் நாணயங்களில் முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2021
20:04

புதுடில்லி:இந்தியாவில், மெய்நிகர் நாணயங்களில் செய்யப்படும் முதலீடும், முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.இந்தியாவில், மெய்நிகர் நாணயங்களில் 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு ஏப்ரலில் மெய்நிகர் நாணயங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு 6,922 கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 75 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது. மெய்நிகர் நாணய ஆராய்ச்சி நிறுவனமான ‘கிரிபேகோ’ மேற்கொண்ட ஆய்வில் இவ்வாறு தெரியவந்துள்ளது.

இது குறித்து இந்நிறுவனத்தின் நிறுவனர் சித்தார்த் சோகானி கூறியதாவது:இந்தியாவில் 10.5 கோடி பேர் அல்லது இந்திய மக்கள் தொகையில் 7.90 சதவீதம் பேர், இத்தகைய ‘டிஜிட்டல் டோக்கன்’களில் முதலீட்டை மேற்கொண்டிருக்கின்றனர். இம்முதலீடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால், அதிகமான பேர் முதலீடு செய்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

மெய்நிகர் நாணயங்களில் முதலீடுகள் அதிகரித்து வருவதற்கு இன்னொரு முக்கிய காரணம், மெய்நிகர் நாணய ‘எக்ஸ்சேஞ்ச்’களில், எஸ்.ஐ.பி., வசதி மற்றும் ‘பிக்ஸட் டிபாசிட்’ திட்டங்கள் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டதாகும்.

இருப்பினும், இந்தியாவில் முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இத்தகைய முதலீடுகள் முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)