பதிவு செய்த நாள்
09 நவ2021
20:37
புதுடில்லி:‘இன்ஸ்பிரா என்டர்பிரைஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, கடந்த ஆகஸ்டில், செபிக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 800 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் போது, 300 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும்; 500 கோடி ரூபாய்க்கு நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் பங்குகளையும் விற்பனை செய்ய, இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
திரட்டப்படும் நிதியை கொண்டு, நடைமுறை மூலதன தேவைகளுக்கும், கடன்களை திருப்பி செலுத்தவும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.இன்ஸ்பிரா என்டர்பிரைஸ் நிறுவனம், இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு, இணைய பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் மாற்ற சேவைகளை வழங்கி வருகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|