பதிவு செய்த நாள்
10 நவ2021
21:48
வங்கி அதிகாரிகளுடன் சந்திப்பு
உற்பத்தி துறையினருக்கு கடன் வழங்குவதில் இருக்கும் பிரச்னைகளை நீக்குவதற்காக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு, 17ம் தேதி துவங்கி, இரண்டு நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி ரீபண்டு
நடப்பு நிதியாண்டில், வருமான வரித் துறை 1.15 லட்சம் கோடி ரூபாயை, ரீபண்டாக வழங்கி உள்ளது.வருமான வரித் தாக்கல் செய்த கிட்டத்தட்ட 98 லட்சம் பேருக்கு, கடந்த 8ம் தேதி வரையிலான காலத்தில், இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது என, இத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரிசர்வ் வங்கி கவர்னர்
டீசல் மற்றும் பெட்ரோல் மீதான கலால் வரியை குறைப்பது குறித்த மத்திய அரசின் சமீபத்திய முடிவு, பணவீக்கத்திற்கு கணிசமான அளவு சாதகமானது என, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும், உணவுப் பணவீக்கம் தற்போது கட்டுக்குள் உள்ளது என்றும்; இருப்பினும், அடிப்படை பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
‘பேடிஎம்’ பங்கு வெளியீடு
புதிய பங்கு வெளியீட்டில், ‘பேடிஎம்’ நிறுவன பங்குகள் முழுமையாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பேஎடிஎம் நிறுவனம், 18 ஆயிரத்து, 300 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்காக, புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்தது. பங்கு வெளியீடு நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
ஐ.சி.ஐ.சி.ஐ., லம்பார்டு தீவிரம்
சென்னையை வெள்ளம் பாதித்திருக்கும் நிலையில், வாகனங்களுக்கான இழப்பீட்டு கோரல் செயல்முறையை துரிதமாக்க, ‘ஐ.சி.ஐ.சி.ஐ., லம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ்’ நிறுவனம், பிரத்யேக அதிகாரிகளை நியமித்திருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், மழை நீர் பாதிப்பு குறித்த முன்னெச்சரிக்கை குறுஞ்செய்திகளையும் இந்நிறுவனம் அனுப்பி வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|