பதிவு செய்த நாள்
10 நவ2021
21:52
புதுடில்லி:உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னோக்கி செல்வதாக, நிதியமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
மத்திய நிதியமைச்சகத்தின், மாதாந்திர பொருளாதார ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:விரைவாக தடுப்பூசி போடப்படுவது, உற்சாகமான பண்டிகை காலம் ஆகியவை, இந்தியாவின் தற்போதைய பொருளாதார மீட்சியை துாண்டும் வகையில் அமைந்துள்ளன.இதன் காரணமாக, வினியோக பிரசனைகள், வேலைவாய்ப்பின்மை ஆகியவை குறையும் என எதிர்பார்க்கலாம்.
பெரிய கட்டமைப்பு சீர்திருத்தங்களை உள்ளடக்கிய ‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டம் நாட்டின் பொருளாதார மீட்சியை ஏற்படுத்துவதில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் வாயிலாக, வணிக வாய்ப்புகளும், செலவழிக்கும் வழிகளும் அதிகரித்துள்ளன.சீர்திருத்த நடவடிக்கைகள், உள்கட்டமைப்புக்கான முதலீடுகளை ஊக்குவித்தல், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்திட்டம், தேவையை அதிகரிப்பது, நுகர்வை அதிகரிப்பது ஆகியவற்றின் வாயிலாக, பொருளாதார மீட்சியின் வேகம் அதிகரித்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
ஜனவரி மாதம் வெளியான, நிதியமைச்சகத்தின் ‘பொருளாதார ஆய்வு 2020 – 21’ல், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 11 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|