‘ஏர் இந்தியா’வை ஒருங்கிணைத்து பெரிய நிறுவனமாக்குகிறது ‘டாடா’ ‘ஏர் இந்தியா’வை ஒருங்கிணைத்து பெரிய நிறுவனமாக்குகிறது ‘டாடா’ ...  விமான பயண கட்டணம் 30 – 100 சதவீதம் அதிகரிப்பு விமான பயண கட்டணம் 30 – 100 சதவீதம் அதிகரிப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பேடிஎம்., பட்டியலிடப்பட்டது கண்ணீர் சிந்திய நிறுவனர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2021
19:54

மும்பை:‘பேடிஎம்’ நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்படுவதை முன்னிட்டு, நேற்று மும்பை பங்குச் சந்தையில் உரையாற்றிய, அதன் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான விஜய் சேகர் ஷர்மா உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.

சாதாரண பள்ளிக்கூட ஆசிரியரின் மகனாக பிறந்த ஷர்மா, இந்தியாவின் மிகப் பெரிய புதிய பங்கு வெளியீட்டை நிகழ்த்தி உள்ளார். பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ‘ஒன்97 கம்யூனிகேஷன்’ நிறுவனத்தின் பங்குகள் நேற்று சந்தையில் பட்டியலிடப்படுவதை முன்னிட்டு, மும்பை பங்குச் சந்தையின் ஹாலில் கூடியிருந்த பொதுமக்கள் முன் அவர் உரையாற்றினார்.

அப்போதுதான் அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார். வழிந்த கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் கர்ச்சீப்பால் துடைத்துக் கொண்டார்.பேடிஎம் நிறுவனம், 18 ஆயிரத்து, 300 கோடி ரூபாய் நிதி திரட்டும் வகையில், கடந்த 8ம் தேதியன்று புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்தது.

இதனையடுத்து, பங்குகள் சந்தைகளில் பட்டியலிடப்பட்டது. ஆனால், பங்கின் வெளியீட்டு விலை 2,150 ரூபாய் என்று இருந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில், வர்த்தகத்தின் இடையே 27 சதவீதம் அளவுக்கு சரிந்து 1,564 ரூபாய் வரை இறங்கியது.முதலீட்டாளர்கள், வர்த்தகம் துவங்கிய சில மணி நேரங்களிலேயே, 35 ஆயிரம் கோடி ரூபாயை இழப்பை சந்தித்தனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)