பதிவு செய்த நாள்
18 நவ2021
19:54
மும்பை:‘பேடிஎம்’ நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்படுவதை முன்னிட்டு, நேற்று மும்பை பங்குச் சந்தையில் உரையாற்றிய, அதன் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான விஜய் சேகர் ஷர்மா உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.
சாதாரண பள்ளிக்கூட ஆசிரியரின் மகனாக பிறந்த ஷர்மா, இந்தியாவின் மிகப் பெரிய புதிய பங்கு வெளியீட்டை நிகழ்த்தி உள்ளார். பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ‘ஒன்97 கம்யூனிகேஷன்’ நிறுவனத்தின் பங்குகள் நேற்று சந்தையில் பட்டியலிடப்படுவதை முன்னிட்டு, மும்பை பங்குச் சந்தையின் ஹாலில் கூடியிருந்த பொதுமக்கள் முன் அவர் உரையாற்றினார்.
அப்போதுதான் அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார். வழிந்த கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் கர்ச்சீப்பால் துடைத்துக் கொண்டார்.பேடிஎம் நிறுவனம், 18 ஆயிரத்து, 300 கோடி ரூபாய் நிதி திரட்டும் வகையில், கடந்த 8ம் தேதியன்று புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்தது.
இதனையடுத்து, பங்குகள் சந்தைகளில் பட்டியலிடப்பட்டது. ஆனால், பங்கின் வெளியீட்டு விலை 2,150 ரூபாய் என்று இருந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில், வர்த்தகத்தின் இடையே 27 சதவீதம் அளவுக்கு சரிந்து 1,564 ரூபாய் வரை இறங்கியது.முதலீட்டாளர்கள், வர்த்தகம் துவங்கிய சில மணி நேரங்களிலேயே, 35 ஆயிரம் கோடி ரூபாயை இழப்பை சந்தித்தனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|