பதிவு செய்த நாள்
08 டிச2021
22:05
புதுடில்லி:இந்தியாவில் முதன் முறையாக ‘டிஜிட்டல்’ தங்கத்திற்கு கடன் வழங்கும் வசதி அறிமுகமாகியுள்ளது.
ஷிவாலிக் ஸ்மால் பைனான்ஸ் வங்கி, இந்தியா கோல்டு நிறுவனத்துடன் இணைந்து டிஜிட்டல் தங்கத்திற்கு, 60 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்குகிறது. இதன் வாயிலாக, தங்க முதலீட்டு பத்திரங்கள், ‘தங்க இ.டி.எப்.,’ திட்டங்கள் போன்ற டிஜிட்டல் தங்கத்தில் செய்யப்படும் முதலீட்டின் மீது, மாதம், 1 சதவீத வட்டியில் கடன் பெறலாம்.
கடன் பெறுவது தொடர்பான அனைத்து பணிகளும் இணையம் வாயிலாகவே மேற்கொள்ளப்படுகிறது. இதனால், எந்த இடத்தில் இருந்தும் சுலபமாக டிஜிட்டல் தங்கத்தின் மீது கடன் பெற முடியும். மேலும், கடனை புதுப்பிக்கவோ அல்லது தங்க நாணயங்களாகவோ வாங்கிக் கொள்ளலாம்.
‘‘இந்தியாவில் முதன் முறையாக அறிமுகமாகியுள்ள டிஜிட்டல் தங்க கடன் வசதியை, வாடிக்கையாளர்கள் வங்கி கிளைக்கு வராமலே பெறலாம்,’’ என, ஷிவாலிக் ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி கவுரவ் மிட்டல் தெரிவித்துஉள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|