பதிவு செய்த நாள்
08 டிச2021
22:12
மும்பை:தமிழகத்தில் அமைக்கும் மின் வாகன தொழிற்பிரிவுகளில், 2,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக ‘சிம்பிள் எனர்ஜி’ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிறுவனம், கர்நாடக மாநிலம் பெங்களூரில், ‘சிம்பிள் ஒன்’ என்ற மின்சார இரு சக்கர வாகனங்களை தயாரித்து வருகிறது. அடுத்து, தமிழகத்தில் ஓசூர் அருகே சூலகிரியில், மின் வாகனத் தொழிற்சாலையை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து, சிம்பிள் எனர்ஜி நிறுவனர் ராஜ்குமார் கூறியதாவது:கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்தில் மின்சார இரு சக்கர வாகனங்களை தயாரிக்க உள்ளோம். இதற்காக, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம்.சூலகிரியில் 2 லட்சம் சதுர அடி பரப்பில் பிரமாண்டமான தொழிற்சாலை அமைய உள்ளது.
இங்கு முதற்கட்டமாக ஆண்டுக்கு, 10 லட்சம் இரு சக்கர மின் வாகனங்கள் தயாரிக்கப்படும். அடுத்த ஆண்டு மின் வாகன தயாரிப்பு துவங்கும். இரண்டாம் கட்ட தொழில் பிரிவு, 600 ஏக்கரில் அமைய உள்ளது. இங்கு, 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் தொழிற்சாலையில், 2023ல் மின் வாகன தயாரிப்பு துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|