பதிவு செய்த நாள்
10 டிச2021
00:57
புதுடில்லி:நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’யின் தயாரிப்புகளில் ஒன்றான, ‘பலேனோ’ காரின் விற்பனை 10 லட்சத்தை தாண்டி உள்ளது
.கடந்த 2015 அக்டோபரில், பலேனோ கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் விற்பனை தற்போது 10 லட்சத்தை தாண்டியுள்ளதாக, மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.கடந்த 2018ம் ஆண்டு நவம்பரில், இந்த காரின் விற்பனை 5 லட்சம் என்ற நிலையை அடைந்தது. அதன்பின் தற்போது 10 லட்சம் என்ற எண்ணிக்கையை தாண்டியுள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் நிர்வாக இயக்குனர் ஷஷாங் ஸ்ரீவத்ஸவா கூறியதாவது:பலேனோ அறிமுகம் ஆனதிலிருந்தே, ‘பிரீமியம் ஹேட்ச்பேக்’ பிரிவு விற்பனையில் முதலிடத்தை பிடித்துவிட்டது. இதன் சந்தை பங்களிப்பு, 25 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.
தொழில்நுட்பம் உள்ளிட்ட பலவற்றில் வளர்ச்சி கண்டிருக்கும் நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்றதாக இந்த கார் உள்ளது.இந்த மாடல் கார் விற்பனை மேலும் பல உச்சங்களை தொடும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|