பதிவு செய்த நாள்
10 டிச2021
01:00
புதுடில்லி:புதிய கார்களை வாங்கு வதற்காக பதிவு செய்துவிட்டு, நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை அடுத்து, வாடிக்கையாளர்கள் தங்கள் முன்பதிவை ரத்து செய்வது அதிகரித்துள்ளது.
உலகளவில், ‘செமிகண்டக்டர் சிப்’ கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை அடுத்து, வாகனத்தை வாங்குவதற்காக முன்பதிவு செய்து விட்டு காத்திருக்கும் சூழல் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.சில வாகனங்களை வாங்குவதற்கான காத்திருப்பு காலம், 12 மாதம் என்ற அளவுக்கு நீடித்துக் கொண்டு போகிறது.
துறையினரால், மாதம் 2 – 2.5 லட்சம் வாகனங்கள் என்ற அளவில் மட்டுமே வினியோகிக்க முடியும் எனும் சூழலில், ‘புக்கிங் ஆர்டர்கள்’ 5.5 லட்சம் என்ற அளவில் அதிகரித்து உள்ளது.
இதையடுத்து, மாதம் ஒன்றுக்கு 40 – 45 ஆயிரம் வாடிக்கையாளர்கள், தங்களுடைய முன்பதிவை ரத்து செய்வதாக கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, ஒரே மாடல் காருக்கு பல டீலர்களிடம் முன்பதிவு செய்வதும் அதிகரித்திருப்பதால், ரத்து செய்யும் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது போன்று தெரிகிறது என, முகவர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|