'வாட்ஸ் ஆப்' வாயிலாக 'ரீசார்ஜ்' : ஜியோ அறிமுகம் 'வாட்ஸ் ஆப்' வாயிலாக 'ரீசார்ஜ்' : ஜியோ அறிமுகம் ...  நிறுவனங்களில் துணிகர முதலீடு  நவம்பரில் இரு மடங்கு உயர்வு நிறுவனங்களில் துணிகர முதலீடு நவம்பரில் இரு மடங்கு உயர்வு ...
குறுந்தொழில் நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2021
10:05

புதுடில்லி : மூலப் பொருட்கள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த இந்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன கூட்டமைப்பான, ஏ.ஐ.சி.ஏ., அழைப்பு விடுத்துள்ளது.


இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 30 சதவீத பங்களிப்பை குறு, சிறு, நடுத்தர தொழில்கள் வழங்குகின்றன. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் பங்கு, 48 சதவீதமாக உள்ளது.இந்நிலையில், மூலப்பொருட்களின் விலையை குறைக்க, ஏ.ஐ.சி.ஏ., மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, இக்கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டில், மூலப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், குறு,சிறு,நடுத்தர தொழில்கள் துறை கடும் பாதிப்பை சந்தித்துஉள்ளது. சந்தைப் போட்டி காரணமாக விலை உயர்வை, தயாரிப்பு பொருட்கள் மீது சுமத்த முடியாத நிலையில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. மூலப் பொருட்கள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
எனினும் இன்னும் நடவடிக்கை எடுக்காததால், மூலப் பொருட்களின் விலை குறைப்பு கோரிக்கையை முன்வைத்து, வரும், 20ம் தேதி, நாடு முழுதும் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மூட முடிவு செய்துள்ளோம். அத்துடன், அன்றைய தினம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, ஒரு மணி நேரம் அமைதியான முறையில் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம். மத்திய அரசு, எங்கள் கோரிக்கையை ஏற்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)