பதிவு செய்த நாள்
21 டிச2021
09:59
மும்பை : 'ஒமைக்ரான்' தொற்று பரவல் குறித்த அச்சம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள், நேற்று கடுமையான சரிவைக் கண்டன.
அண்மைக் காலமாக, உலகெங்கிலும் அதிகரித்து வரும் ஒமைக்ரான் தொற்றுநோய் பரவல் அதிகரிப்பு முதலீட்டாளர்களை மிகவும் அச்சப்படுத்தி வருகிறது. இதையடுத்து, உலகளாவிய பங்குச் சந்தைகளில் பங்குகளை விற்கும் போக்கும் அதிகரித்து வருகிறது.இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் நேற்று பிரதிபலித்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 1,190 புள்ளிகள் சரிவைக் கண்டது.இது, கிட்டத்தட்ட 2.90 சதவீத சரிவாகும். இதேபோல், மற்றொரு உள்நாட்டு பங்குச் சந்தையான தேசிய பங்கு சந்தையின் 'நிப்டி'யும் 371 புள்ளிகள் சரிவைக் கண்டது.
நேற்றைய வர்த்தகத்தில், முதலீட்டாளர்கள் 6.79 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்தனர்.அதிகரிக்கும் தொற்று நோய் பரவல், அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை அதிகளவில் விற்பனை செய்து வருவது மற்றும் வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குன்றியுள்ளது ஆகியவை, உலகளவில் பங்குச் சந்தைகளை பாதித்து வருகின்றன என, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆசிய பங்குச் சந்தைகள் மட்டுமின்றி; ஐரோப்பிய பங்குச் சந்தைகளும் நேற்று சரிவைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|