பதிவு செய்த நாள்
21 டிச2021
20:02
புதுடில்லி:நிறுவனங்களில், ‘இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல்’ ஆகிய நடவடிக்கைகள், இதுவரை இல்லாத அளவுக்கு, நடப்பு ஆண்டில் அதிகரித்துள்ளன என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
‘பெய்ன் அண்டு கம்பெனி’ நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நாட்டில் இதுவரை இல்லாத வகையில், நிறுவன இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் மிகவும் அதிகமாக நடைபெற்றுள்ளன.
அதிலும், முதன் முறையாக பிறவற்றை வாங்கும் நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. கிட்டத்தட்ட 80 சதவீத நிறுவனங்கள், முதன் முறையாக இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன.மேலும் 570 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட, இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் திட்டங்களின் எண்ணிக்கை 85 ஆகும்.
கடந்த 2017 – 19 வரையிலான ஆண்டுகளில், மிகப்பெரிய மதிப்பிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 2020 – 21ம் ஆண்டுகளில், நடுத்தர அளவிலான மதிப்பு கொண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொரோனாவுக்கு பின், நிறுவனங்கள் தங்களுடைய வணிகத்தை மாற்றிக் கொள்வதற்கு, இத்தகைய இணைப்பு மற்றும் கையகப் படுத்துதல் நடவடிக்கையை ஒரு வழியாக கருதி செயல்படுத்தி இருக்கின்றன.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|