பதிவு செய்த நாள்
21 டிச2021
20:07
மும்பை:‘ஜே.எஸ்.டபுள்யு., சிமென்ட்’ நிறுவனத்தின் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சிறுபான்மை பங்குகளை, எஸ்.பி.ஐ., வாங்கி உள்ளது.எஸ்.பி.ஐ., செய்துள்ள இந்த முதலீட்டின் காரணமாக, ஜே.எஸ்.டபுள்யு., சிமென்ட் நிறுவனத்தின் உற்பத்தி அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, ஆண்டுக்கு 1.40 கோடி டன் என்ற நிலையிலிருந்து, ஆலையின் உற்பத்தி திறன் 2.5 கோடி டன் ஆக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்பாக, இந்த ஆண்டின் துவக்கத்தில், உலகளாவிய தனியார் பங்கு முதலீட்டாளர்களான ‘அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட் மற்றும் சினெர்ஜி மெட்டல்ஸ் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்’ ஆகிய இரு நிறுவனங்கள், ஜே.எஸ்.டபுள்யு., நிறுவனத்தில் முதலீட்டை மேற்கொண்டுள்ளன.
தற்போது எஸ்.பி.ஐ., முதலீட்டையும் சேர்த்து, நடப்பு ஆண்டில் மட்டும் 1,500 கோடி ரூபாய் முதலீட்டை இந்நிறுவனம் பெற்றுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|