ஆன்லைன் ஆர்டரில் பிரியாணிக்கு முதலிடம் ‘ஸ்விக்கி’யில் ஒரு நிமிடத்துக்கு 115 பிரியாணி ஆன்லைன் ஆர்டரில் பிரியாணிக்கு முதலிடம் ‘ஸ்விக்கி’யில் ஒரு ... ...  ஒரே நாளில் 8.7 லட்சம் வருமான வரி தாக்கல் ஒரே நாளில் 8.7 லட்சம் வருமான வரி தாக்கல் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
புத்தாண்டிலிருந்து ‘டோக்கனைசேஷன்’ அறிமுகம்:ரிசர்வ் வங்கியிடம் அவகாசம் கோரும் நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2021
21:20

புதுடில்லி:ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி, புத்தாண்டிலிருந்து, ‘டெபிட்’ கார்டு மற்றும் கிரெடிட்’ கார்டு வாயிலாக பொருட்கள் அல்லது சேவையை வாங்குவதற்கான பணம் செலுத்தும் முறை மாற உள்ளது.
இந்நிலையில், புதிய முறைக்கு மாறுவதற்கு, கூடுதலாக ஆறு மாத காலம் அவகாசம் வழங்குமாறு, ரிசர்வ் வங்கியை, டிஜிட்டல் தளங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் துறையை சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.ரிசர்வ் வங்கி, கார்டுதாரர்களின் தரவுகளை பாதுகாக்கும் வகையில், ‘டோக்கனைசேஷன்’ குறித்த விதிகளை அண்மையில் அறிவித்தது. இது வரும் ஜனவரி முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது.
இதனையடுத்து, இனி கார்டுதாரர்கள், தங்களுடைய டெபிட் அல்லது கிரெடிட் கார்டு சம்பந்தமான தரவுகளை மூன்றாம் தரப்பு செயலிகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டிய தேவை இருக்காது.தற்போது செயலி வாயிலாக ஒரு பொருளையோ, சேவையையோ பெறும்போது, அதன் செயலியில் நம்முடைய கார்டு குறித்த தரவுகள் சேமிக்கப்படுகின்றன.
இதன் காரணமாக, வாடிக்கையாளர்கள் மோசடிகளுக்கு ஆளாகும் அபாயமும் உள்ளது.இதை தவிர்ப்பதற்காக, இனி மாற்றுக் குறியீடான ‘டோக்கன் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.
இதன்படி, புத்தாண்டிலிருந்து கார்டு வழங்கும் வங்கி அல்லது, கார்டு நெட்வொர்க் நிறுவனம் தவிர, வேறு எந்த அமைப்பும் கார்டுகளின் தரவுகளை சேமிக்க முடியாது. இவற்றில் ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளும் நீக்கப்படும்.
இந்நிலையில், ஆன்லைன் வர்த்தக மற்றும் வணிக நிறுவனங்களின் கூட்டமைப்பு, டோக்கனைசேஷனுக்கான கால அவகாசத்தை, மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க கோரி, ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளது.
அதில், புதிய வசதியை வழங்குவதற்கு போதுமான அவகாசம் இல்லை என்றும், வாடிக்கையாளர்களும் இது குறித்து இன்னும் தெளிவாக தெரிந்துகொள்ளவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.வங்கிகள் மற்றும் நெட்வொர்க் நிறுவனங்கள், டோக்கனைசேஷனுக்கு கிட்டத்தட்ட தயாராகி விட்டன. இருப்பினும், வணிகர்கள் தரப்பில் இன்னும் தயாராகவில்லை.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)