பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி சீனாவுக்கு இரு மடங்கு அதிகரிப்பு பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி சீனாவுக்கு இரு மடங்கு அதிகரிப்பு ...  ஆயிரம் சந்தேகங்கள் :என்னுடைய ஓய்வு தொகையை  மனைவி பெயரில் முதலீடு செய்யலாமா? ஆயிரம் சந்தேகங்கள் :என்னுடைய ஓய்வு தொகையை மனைவி பெயரில் முதலீடு ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஆர்.பி.ஐ., ‘ரீடைல் டைரக்ட்’ திட்டத்தில்கவனிக்க வேண்டிய அம்சங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2021
19:01

அரசு பத்திரங்களில் தனிநபர்களும் நேரடியாக முதலீடு செய்ய வழி செய்யும் வகையில் நவம்பர் மாதம், ‘ரீடைல் டைரக்ட்’ திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. இதன் மூலம் சில்லரை முதலீட்டாளர்கள், ரிசர்வ் வங்கியின் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் ‘ரீடைல் டைரக்ட் கில்ட்’ கணக்கு துவக்கி பராமரிக்கலாம். இதுவரை தனிநபர்கள் அரசு பத்திரங்களில் ‘மியூச்சுவல் பண்டு’ திட்டங்கள் மூலம் மட்டுமே அரசு பத்திரங்களில் முதலீடு செய்யலாம் எனும் நிலை இருந்தது. ரீடைல் டைரக்ட் திட்டத்தின் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.

செலவு இல்லை:

ரீடைல் டைரக்ட் கில்ட் என்ற ஆர்.டி.ஜி., கணக்கை துவக்க எந்த கட்டணமும் இல்லை என்பதோடு, எந்த இடைத்தரகரும் இல்லாமல் நேரடியாக துவக்கலாம். இதன் மூலம் சில்லரை முதலீட்டாளர்கள் குறைந்த பரிவர்த்தனை செலவில் முதலீடு செய்யலாம். ரிசர்வ் வங்கி இணையதளத்தில் பதிவு செய்து கணக்கு துவக்கலாம்.

நேரடி முதலீடு:

புதிய பத்திரங்கள் வெளியிடப்படும் போது நேரடியாக வாங்கலாம். சில்லரை முதலீட்டாளர்கள் 10 ஆயிரம் ரூபாய் எனும் குறைந்த தொகையில் இருந்து துவங்கலாம். இந்த பத்திரங்களைபங்குச் சந்தையிலும் பரிவர்த்தனை செய்யலாம்; ஆன்லைனில், மொபைலிலும் வாங்கி விற்கலாம்.

ஆவணங்கள்:

வங்கி கணக்கு, பான் கார்டு எண், ஆதார் எண்,ஆதாருடன் இணைந்த போன் எண் உள்ளிட்ட விபரங்களைசமர்ப்பிக்க வேண்டும். தனிநபர்கள் தனியாக அல்லது கூட்டாக ஒரு கணக்கு மட்டும் தான் துவக்க முடியும். கூட்டு கணக்கு துவக்கியவர் தனியேவும் கணக்கு துவக்கலாம்.

பத்திர வகைகள்:

நான்கு வகையான பத்திரங்கள் உள்ளன.அரசு கருவூல பத்திரங்கள் – டி-பில்கள், தேதியிட்ட அரசுபத்திரங்கள், மாநில வளர்ச்சி கடன்கள் மற்றும் தங்க சேமிப்புபத்திரங்கள் ஆகியவை இதில் அடங்கும். குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செயலாம்; தங்க பத்திரங்கள் எனில்குறைந்த பட்சம் 1 கிராம்.

யாருக்கு ஏற்றவை?

சில்லரை முதலீட்டாளர்களுக்கான நீண்ட கால முதலீடு வாய்ப்புகளில் ஒன்றாக அமைகிறது. அரசு பத்திரங்கள் என்பதால் பாதுகாப்பானவை. ஆனால், இவை அளிக்கும் பலன் பல்வேறு அம்சங்கள் சார்ந்தவை. குறைந்த இடர் கொண்டமுதலீட்டாளர்களுக்கு இவை ஏற்றவை.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)