ஆயிரம் சந்தேகங்கள் :என்னுடைய ஓய்வு தொகையை  மனைவி பெயரில் முதலீடு செய்யலாமா? ஆயிரம் சந்தேகங்கள் :என்னுடைய ஓய்வு தொகையை மனைவி பெயரில் முதலீடு ... ...  'ஏர் இந்தியா' கைமாறுவதில் தாமதம் 'ஏர் இந்தியா' கைமாறுவதில் தாமதம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஆர்.பி.எல்., வங்கி நிலவரம் ‘ஓகே’ வதந்தியை நம்பாதீர்: ரிசர்வ் வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2021
09:37


மும்பை : ‘ஆர்.பி.எல்., வங்கியின் நிதி நிலவரம் திருப்திகரமாக உள்ளதால், வாடிக்கையாளர்கள் வதந்தியை நம்ப வேண்டாம்’ என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த, ஆர்.பி.எல்., எனப்படும் ரத்னாகர் வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான விஷாவிர் அஹூஜா, திடீரென பதவி விலகினார்.அவர், ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி விலகியதாக தகவல் கசிந்தது. இதையடுத்து, வங்கியின் இடைக்கால நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக, ராஜிவ் அஹூஜாவை, ரிசர்வ் வங்கி நியமித்தது. அத்துடன், வங்கியின் நிர்வாகக் குழுவில் கூடுதல் இயக்குனராக, ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் தயாள் நியமிக்கப்பட்டார்.

‘ஆர்.பி.எல்., வங்கியின் நிதி நிலவரம் சரியில்லாததே ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு காரணம்’ என, ஊடகங்களில் தகவல் வெளியானது. இதையடுத்து, ஆர்.பி.எல்., வங்கி வாடிக்கையாளர்கள் அச்சமடைந்து, முதலீடுகளை திரும்பப் பெறத் துவங்கினர்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஆர்.பி.எல்., வங்கியின் மூலதனம் மற்றும் நிதி நிலவரம் திருப்திகரமாக உள்ளது. கடந்த செப்., உடன் முடிந்த அரையாண்டில், வங்கியின் மூலதன இருப்பு விகிதம், 16.33 சதவீதம்; ஒதுக்கீட்டு விகிதம், 76.6 சதவீதம் என, போதிய அளவிற்கு உள்ளது.பணப்புழக்க விகிதம், ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்பட்டதை விட, 53 சதவீதம் அதிகமாக உள்ளது. எனவே, ஆர்.பி.எல்., வங்கி குறித்த யூகச் செய்திகளை நம்பி, எத்தகைய முடிவையும் முதலீட்டாளர்கள் எடுக்க வேண்டாம்.வங்கி நிர்வாகத்திற்கு கூடுதல் வலு சேர்க்கவே புதிய இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)