பிரிட்டனின் ‘பேட்டரி’ நிறுவனம் ‘ரிலையன்ஸ்’ வசம் வந்தது பிரிட்டனின் ‘பேட்டரி’ நிறுவனம் ‘ரிலையன்ஸ்’ வசம் வந்தது ...  தொழில்நுட்ப சாதனங்களில் ஆர்வம் மாறிவிட்ட மக்கள் மனநிலை தொழில்நுட்ப சாதனங்களில் ஆர்வம் மாறிவிட்ட மக்கள் மனநிலை ...
இந்தியாவில் ‘செமிகண்டக்டர்’ ஆலைகள் தீவிரம் காட்டும் மத்திய அரசு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2022
01:06

புதுடில்லி:செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே ஆகியவற்றை தயாரிப்பதற்கான ஆலையை அமைக்கும் திட்டங்களுக்கான விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து, இன்று முதல் பெறத் துவங்கி இருப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு பின், உலகம் முழுக்க செமிகண்டக்டர் சிப்களுக்கான தேவை அதிகரித்து உள்ளது. அதேசமயம், வினியோகம் சரிவை கண்டுள்ளது. இதனால் வாகன தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகின்றன.
இந்தியாவிலும், செமிகண்டக்டருக்கான தேவை அதிகமிருப்பினும், போதுமான சப்ளை இல்லை. இதையடுத்து, மத்திய அரசு, இந்தியாவில் செமிகண்டக்டர் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கான டிஸ்பிளே ஆகியவற்றை தயாரிப்பதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில், 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, ஊக்கச் சலுகை திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது.
தற்போது சலுகை திட்டத்தை அறிவித்த சூட்டோடு அடுத்தகட்டமாக, ஆலைகளை அமைப்பதற்கான விண்ணப்பங்களையும் பெற துவங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது. செமிகண்டக்டர் ஆலைகள் துவக்குவதில் அரசு தீவிரமாக இருக்கிறது.
இது குறித்து, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ், “உலகளவிலான செமிகண்டக்டர் தயாரிப்பு நிறுவனங்கள், இந்தியாவில் தயாரிப்பை துவங்க, இது ஒரு நல்ல சந்தர்ப்பம். மேலும், இது சரியான சமயமும் ஆகும்,” என்று தெரிவித்துள்ளார்.
ஆலைகளை அமைப்பதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு வசதியாக, புதிய இணையதள வசதியையும் மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. அதன் வாயிலாக, இந்தியாவில் செமிகண்டக்டர் தயாரிக்க விரும்பும் நிறுவனங்கள், எளிதாக விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)