இந்தியாவில் ‘செமிகண்டக்டர்’ ஆலைகள் தீவிரம் காட்டும் மத்திய அரசு இந்தியாவில் ‘செமிகண்டக்டர்’ ஆலைகள் தீவிரம் காட்டும் மத்திய அரசு ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
தொழில்நுட்ப சாதனங்களில் ஆர்வம் மாறிவிட்ட மக்கள் மனநிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2022
01:08

புதுடில்லி:கடந்த 2021ம் ஆண்டில் நுகர்வோர்கள், மேம்பட்ட தொழில்நுட்ப சாதனங்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டியிருப்பதாக, ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
குறிப்பாக, பெரிய திரை கொண்ட ‘டிவி’கள்; சவுண்டு பார்கள் போன்றவற்றை வாங்குவதில், அதிக ஆர்வம் காட்டியிருக்கின்றனர்.சில்லரை விற்பனை நிறுவனமான, ‘க்ரோமா’ கடந்த ஆண்டு நுகர்வோர் மனநிலை குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2021ம் ஆண்டில், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப சாதனங்களை வாங்குவதில், நுகர்வோர் அதிக ஈடுபாடு காட்டிஉள்ளனர்.பெரிய திரை கொண்ட ‘டிவி’கள், பெரிய அளவிலான ‘சைடு பை சைடு’ ரெப்ரிஜிரேட்டர்கள் போன்றவற்றில் ஆர்வம் காட்டியுள்ளனர்.
மேலும், வீட்டு பார்ட்டிகளுக்கு பயன்படும் வகையில், சவுண்டு பார்கள், ஸ்பீக்கர்கள் போன்றவற்றை வாங்குவதிலும் ஈடுபாடு செலுத்தி உள்ளனர்.கொரோனா பாதிப்பை அடுத்து, வீட்டையே பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டதாக மாற்ற, மக்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.இதனால், 55 அங்குல ‘டிவி’ விற்பனை அதிகரித்துள்ளது.
ஹோம் ஆடியோவை பொறுத்தவரை, சவுண்டுபார்கள் அதிகம் விற்பனை ஆகியுள்ளன. இயர்போன்களை பொறுத்தவரை, நான்கில் ஒன்று, ஒயர்லெஸ் இயர்போன்களாகும். ஒயர்கள் இல்லாமல் இணைப்பு வசதிகள் கொண்ட சாதனங்களை வாங்கும் மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர்.சமையலறை சாதனங்களை பொறுத்தவரை, கடந்த ஆண்டில் ‘காபி மேக்கர்’ அதிகம் விரும்பப்பட்டுள்ளது. இதன் விற்பனை இருமடங்கு அதிகரித்துஉள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)