பதிவு செய்த நாள்
01 ஜன2022
01:08
புதுடில்லி:கடந்த 2021ம் ஆண்டில் நுகர்வோர்கள், மேம்பட்ட தொழில்நுட்ப சாதனங்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டியிருப்பதாக, ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
குறிப்பாக, பெரிய திரை கொண்ட ‘டிவி’கள்; சவுண்டு பார்கள் போன்றவற்றை வாங்குவதில், அதிக ஆர்வம் காட்டியிருக்கின்றனர்.சில்லரை விற்பனை நிறுவனமான, ‘க்ரோமா’ கடந்த ஆண்டு நுகர்வோர் மனநிலை குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2021ம் ஆண்டில், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப சாதனங்களை வாங்குவதில், நுகர்வோர் அதிக ஈடுபாடு காட்டிஉள்ளனர்.பெரிய திரை கொண்ட ‘டிவி’கள், பெரிய அளவிலான ‘சைடு பை சைடு’ ரெப்ரிஜிரேட்டர்கள் போன்றவற்றில் ஆர்வம் காட்டியுள்ளனர்.
மேலும், வீட்டு பார்ட்டிகளுக்கு பயன்படும் வகையில், சவுண்டு பார்கள், ஸ்பீக்கர்கள் போன்றவற்றை வாங்குவதிலும் ஈடுபாடு செலுத்தி உள்ளனர்.கொரோனா பாதிப்பை அடுத்து, வீட்டையே பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டதாக மாற்ற, மக்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.இதனால், 55 அங்குல ‘டிவி’ விற்பனை அதிகரித்துள்ளது.
ஹோம் ஆடியோவை பொறுத்தவரை, சவுண்டுபார்கள் அதிகம் விற்பனை ஆகியுள்ளன. இயர்போன்களை பொறுத்தவரை, நான்கில் ஒன்று, ஒயர்லெஸ் இயர்போன்களாகும். ஒயர்கள் இல்லாமல் இணைப்பு வசதிகள் கொண்ட சாதனங்களை வாங்கும் மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர்.சமையலறை சாதனங்களை பொறுத்தவரை, கடந்த ஆண்டில் ‘காபி மேக்கர்’ அதிகம் விரும்பப்பட்டுள்ளது. இதன் விற்பனை இருமடங்கு அதிகரித்துஉள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|