பதிவு செய்த நாள்
01 ஜன2022
19:36
வருமான வரி தாக்கல்
கடந்த 2020 – 21ம் நிதியாண்டுக்கான, வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், கிட்டத்தட்ட 5.89 கோடி பேர், வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளதாக, நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
கடைசி நாளான டிசம்பர் 31ம் தேதியன்று மட்டும், 46.11 லட்சம் பேர், தங்களுடைய வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் வாரியம் தெரிவித்துள்ளது.
‘கோ டிஜிட்’ நிறுவனத்துக்கு கடிவாளம்
‘கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ்’ நிறுவனம், அதன் திட்டங்களில் ஆயுள் காப்பீட்டு பயன்களையும் சேர்த்து வழங்குவதை உடனடியாக நிறுத்தும்படி, காப்பீட்டு துறைக்கான ஒழுங்குமுறை ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ., உத்தரவிட்டுள்ளது. மேலும் அனைத்து ஊடகங்களிலும், ஆயுள் காப்பீட்டு பயன்களை சேர்த்து வழங்குவது குறித்த விளம்பரங்களையும் நிறுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிறு நிதி வங்கி
மும்பையை சேர்ந்த ‘வெஸ்ட் எண்டு ஹவுஸிங் பைனான்ஸ்’ நிறுவனம் சிறு நிதி வங்கி துவங்க அனுமதி வழங்குமாறு, ரிசர்வ் வங்கிக்கு விண்ணப்பித்துள்ளது. ஏற்கனவே, கடந்த ஆகஸ்டில் ‘காஸ்மியா பைனான்ஷியல் ஹோல்டிங்ஸ், டேலி சொலுஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள், சிறு நிதி வங்கி துவங்க, ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன.
எட்டு துறைகளின் வளர்ச்சி
நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி, கடந்த நவம்பரில் 3.1 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டில் பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு மிக குறைந்த வளர்ச்சி இது என்றும், அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. முந்தைய அக்டோபர் மாதத்தில், எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 8.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் மீது விசாரணை
இந்திய சந்தைகள் போட்டி ஆணையமான சி.சி.ஐ., அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளுக்கு எதிரான விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம், செயலிகளை பதிவிறக்கம் செய்வதற்கான அதன் ஆப்பிள் ஸ்டோரில், பயனர்களுக்கு செயலிகளை வழங்குவது மற்றும் டிஜிட்டல் ஆக்கங்களுக்காக பணம் செலுத்துவது உள்ளிட்டவற்றில் விதிமுறைகளை மீறி, ஆதிக்கம் செலுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|