பதிவு செய்த நாள்
01 ஜன2022
19:38
புதுடில்லி:கடந்த டிசம்பர் மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் வருவாய், 1.29 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆறாவது மாதமாக, தொடர்ந்து ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டி வசூல் ஆகி வருகிறது என்றும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே டிசம்பர் மாத வசூலுடன் ஒப்பிடும்போது இது 13 சதவீதம் ஆகும். மேலும் கொரோனாவுக்கு முந்தைய 2019ம் ஆண்டு டிசம்பருடன் ஒப்பிடும்போது, 26 சதவீதம் அதிகமாகும்.
இருப்பினும், கடந்த நவம்பர் மாத வசூலுடன் ஒப்பிடும்போது, டிசம்பரில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.31 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார மீட்சி, வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கைகள், போலி ‘பில்’ களை தடுத்தல் போன்ற காரணங்களால், ஜி.எஸ்.டி., வரி வசூல், கடந்த டிசம்பரில் உயர்ந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும், அடுத்து வரும் மாதங்களிலும், வரி வசூல் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும், அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|