பதிவு செய்த நாள்
04 ஜன2022
09:37
புதுடில்லி : பயணியர் வாகன விற்பனையில், இதுநாள் வரை ‘ஹூண்டாய் மோட்டார்’ வகித்து வந்த இரண்டாவது இடத்தை, கடந்த டிசம்பரில், ‘டாடா மோட்டார்ஸ்’ கைப்பற்றிஉள்ளது.
கொரோனா பரவல் மற்றும் ‘செமிகண்டக்டர் சிப்’ பற்றாக்குறை ஆகிய தடைகளை மீறி, கடந்த ஆண்டில் பயணியர் வாகன விற்பனை வளர்ச்சி பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 27 சதவீதம் வளர்ச்சியடைந்து, 30 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகிஉள்ளன.
உள்நாட்டு சந்தையில், பயணியர் வாகன விற்பனையில், பத்தாண்டுகளுக்கு பின் முதன் முறையாக, கடந்த டிசம்பரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தை விஞ்சி, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இதுவரை இல்லாத வகையில், கடந்த டிசம்பரில் அதிக வாகனங்களை விற்பனை செய்துள்ளது.அதுமட்டுமின்றி; டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டிலும், முழு ஆண்டிலும் இதுவரை இல்லாத விற்பனை உயர்வை கண்டுள்ளது.
கடந்த டிசம்பரில் ஹூண்டாய் 32 ஆயிரத்து, 312 வாகனங்களை விற்பனை செய்திருக்கும் நிலையில், டாடா மோட்டார்ஸ் 35 ஆயிரத்து, 300 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. வரும் மாதங்களிலும் இந்த நிலை தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|