பதிவு செய்த நாள்
04 ஜன2022
22:05
புதுடில்லி:கொரோனா நோய் தொற்றை ‘கவர்’ செய்யும் ‘ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி’கள், ஒமைக்ரான் சிகிச்சைக்கான செலவுகளையும் கவர் செய்யும் என, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ., அறிவித்துள்ளது.
இது குறித்து, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தெரிவித்துஉள்ளதாவது:ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களால் வழங்கப்பட்டிருக்கும், கோவிட் சிகிச்சையை கவர் செய்யும் அனைத்து ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளும், ஒமைக்ரான் சிகிச்சைக்கான செலவுகளையும் கவர் செய்யும்.இவ்வாறு தெரிவித்துஉள்ளது.
அண்மைக் காலமாக ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., இந்த விளக்கத்தை வழங்கி உள்ளது. மேலும், ஒமைக்ரான் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவர்களுக்கான ‘கேஷ்லெஸ்’ வசதியை வழங்க, உரிய முயற்சிகளை, மருத்துவமனைகளுடன் இணைந்து விரைவாக எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
இதேபோல், கடந்த 2020ல், கொரோனா தொற்று வேகமாக பரவியபோது, இழப்பீட்டு அடிப்படையிலான ஹெல்த் பாலிசிகள் எடுத்தவர்களுக்கு, கொரோனாவுக்கான சிகிச்சைக்கான செலவுகளையும் வழங்க வேண்டும் என தெரிவித்தது.
தற்போது, ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, அதற்கான சிகிச்சைக்கான செலவுகளையும் வழங்க வேண்டும் எனும் அறிவிப்பை ஐ.ஆர்.டி.ஐ.ஏ., வழங்கி உள்ளது.இதனால், ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருப்பவர்கள், ஒமைக்ரான் சம்பந்தப்பட்ட சிகிச்சைக்காக, தனியாக பாலிசி எதுவும் எடுக்கத் தேவையிராது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|