பதிவு செய்த நாள்
05 ஜன2022
21:30
புதுடில்லி:பிரிட்டனை சேர்ந்த, ‘கெய்ர்ன் எனர்ஜி’ நிறுவனம், இந்திய அரசின் மீதான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்றுள்ளது. அதற்கு வரவேண்டிய வருமான வரி ரீபண்டை பெறும் வகையில், இந்த நடவடிக்கையை இந்நிறுவனம் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தற்போது, ‘கேப்ரிகான் எனர்ஜி’ என பெயர் மாற்றம் செய்திருக்கும் கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம், இந்திய அரசுக்கு எதிராக வருமான வரி சம்பந்தமாக அமெரிக்கா, பிரான்ஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் கைவிட்டு விட்டதாக அறிவித்துள்ளது.
மத்திய அரசுக்கு சொந்தமான சொத்துக்களை கையகப்படுத்துவது குறித்த நடவடிக்கைக ளையும் இந்நிறுவனம் சட்டபூர்வமாக கைவிட்டுவிட்டதாக அறிவித்துள்ளது.வருமான வரி குறித்து, கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வந்த பிரச்னை, அரசின் கொள்கை முடிவு காரணமாக அண்மையில் ஒரு முடிவுக்கு வந்தது.முன்தேதியிட்டு வரி வசூலிக்கும் சட்டத்தை அரசு நீக்கியது. இதையடுத்து, இந்நிறுவனம் அதனிடமிருந்து வசூலிக்கப்பட்ட 7,900 கோடி ரூபாயை திரும்ப பெற உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|