வெளிநாட்டு வர்த்தக பிரச்னைகளுக்காக மீண்டும் கொரோனா உதவி மையம் வெளிநாட்டு வர்த்தக பிரச்னைகளுக்காக மீண்டும் கொரோனா உதவி மையம் ...  ரத்தன் டாடாவின் சுயசரிதை ஏலத்தில் வென்ற நிறுவனம் ரத்தன் டாடாவின் சுயசரிதை ஏலத்தில் வென்ற நிறுவனம் ...
எல்.ஐ.சி.,க்காக எளிதாக்கப்படும் அன்னிய நேரடி முதலீட்டு கொள்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2022
23:21

புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.,யில், மத்திய அரசு பங்கு விலக்கலை மேற்கொள்ள வசதியாக, அந்நிய நேரடி முதலீட்டு கொள்கையில், வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் மாற்றங்களைச் செய்து வருகிறது.
இது குறித்து, தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையின் செயலர் அனுராக் ஜெயின் கூறியதாவது:நாங்கள் இப்போது அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையை மேலும் எளிமையாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம்.முக்கியமாக, எல்.ஐ.சி., நிறுவனத்தின் பங்குகளை, மத்திய அரசு விற்பனை செய்ய இருப்பதால், அதை எளிதாக்கும் பொருட்டு, திருத்தப்பட்ட அன்னிய நேரடி முதலீடு கொள்கையை கொண்டுவர இருக்கிறோம்.
இது குறித்து, நிதி சேவைகள் துறை, முதலீடு மற்றும் பொது சொத்து நிர்வாக துறை ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.இதுவரை இரு முறை ஆலோசனை கூட்டங்கள் என்னளவில் நடத்தப்பட்டு உள்ளன. இதனையடுத்து, இந்த துறைகள் அனைத்தும் ஒருமித்தமுடிவுக்கு வந்துள்ளன. அதனால், கொள்கையில் மாற்றங்களை சேர்த்து வருகிறோம். இதன் பின், அவை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும்.
தற்போதைய அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையின்படி, இன்சூரன்ஸ் துறையில் ரிசர்வ் வங்கி, அரசு ஆகியவற்றின் முன் அனுமதி பெறாமலே, ஆட்டோமேட்டிக் வழியில் 74 சதவீதம் வரை, அன்னிய முதலீட்டை மேற்கொள்ளலாம்.ஆனால், இந்த விதி எல்.ஐ.சி.,க்கு பொருந்தாது. ஏனெனில் எல்.ஐ.சி.,க்கு என தனியான சட்டம் உள்ளது.
இதன்படி, அன்னிய நேரடி முதலீட்டுக்கு எல்.ஐ.சி.,யில் இடம் இல்லை. எல்.ஐ.சி., புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதால், கொள்கையளவில் பல மாற்றங்கள் தேவைப்படுகின்றன.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)