பதிவு செய்த நாள்
11 ஜன2022
11:16
புதுடில்லி : ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, அதன் கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணங்களை பிப்ரவரி 10ம் தேதி முதல் அதிகரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த கட்டண உயர்வு குறித்து வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பி உள்ளது. இதன்படி, பிப்ரவரி 10 தேதி முதல், கிரெடிட் கார்டு வாயிலாக ரொக்கப் பணம் எடுக்கும் போது, பரிவர்த்தனை கட்டணம் 2.5 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.இதே போல், காசோலை திரும்பிவிட்டால், மொத்த பணத்தில் 2 சதவீதம், கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக 500 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாமதமாக பணம் செலுத்தும்பட்சத்தில், அதற்கான கட்டணத்தையும் மாற்றி அமைத்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ., வழங்கும் அனைத்து கார்டுகளுக்கும் இது பொருந்தும். இந்த தாமதத்துக்கான கட்டணம், பாக்கி தொகையை பொறுத்து வேறுபடும். 100 ரூபாயாக இருப்பின், அபராத கட்டணம் கிடையாது. அதிகபட்சமாக, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகைக்கு 1,200 ரூபாய் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|