பதிவு செய்த நாள்
18 ஜன2022
21:02
புதுடில்லி:தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை, 4 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும்; இத்துறைக்கு, பட்ஜெட்டில் சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும் என்றும், ‘நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்’ வலியுறுத்தி உள்ளது.
பட்ஜெட்டுக்கு முந்தைய பரிந்துரைகளின் ஒரு பகுதியாக, இத்தகைய சில கோரிக்கைகளை இந்த கவுன்சில் முன்வைத்துள்ளது.தற்போது தங்கத்துக்கான இறக்குமதி வரி 7.5 சதவீதமாக உள்ளது. இதை 4 சதவீதமாக குறைக்குமாறு, கவுன்சில் கோரிக்கை வைத்திருக்கிறது. மேலும் நறுக்கிய மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள் மற்றும் நவரத்தினங்களுக்கான இறக்குமதி வரியை, தற்போதைய 7.5 சதவீதத்திலிருந்து, 2.5 சதவீதமாக குறைக்குமாறும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி வரியை குறைக்கும்பட்சத்தில், தற்போது முடங்கும் நடைமுறை மூலதனம் 500 கோடி ரூபாயாக இருப்பது, 225 கோடி ரூபாயாக குறையும் என்றும், கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கவுன்சிலின் தலைவர் கோலின் ஷா கூறியதாவது:நடப்பு நிதியாண்டில், இத்துறை 3.3 லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி இலக்கை எட்டிவிடும். அடுத்து, நாட்டின் நூறாவது சுதந்திர தின ஆண்டில், 7.4 லட்சம் கோடி ரூபாயை எட்ட இலக்கு வைத்து உள்ளோம்.இந்த இலக்கை எட்ட, வரும் பட்ஜெட் அறிவிப்பில் அரசு சில சிறப்பு சலுகைகளையும், கொள்கை மறுசீரமைப்பையும் அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரியை குறைப்பதன் வாயிலாக, உலகின் நம்பர் ஒன் ஆபரண ஏற்றுமதி நாடாக இந்தியா உயரும்.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|