பதிவு செய்த நாள்
20 ஜன2022
21:18
புதுடில்லி:அடுத்த இரண்டு ஆண்டுகளில், அதிக சொத்து மதிப்பு கொண்டவர்களில் 76 சதவீதம் பேர், 5 கோடி ரூபாய்க்கும் அதிமான மதிப்பு கொண்ட சொத்துக்களை வாங்க முன்வருவார்கள் என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
விருப்பம்
ஆடம்பர ரியல் எஸ்டேட் பிரிவில், முன்னணி தரகு நிறுவனமான ‘இந்தியா சதபேஸ் இன்டர்நேஷனல் ரியால்ட்டி’ நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாட்டில் உள்ள முக்கியமான எட்டு பெருநகரங்களில், அதிகம் சொத்து மதிப்புடையவர்களின், சொத்து வாங்கும் விருப்பம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் 76 சதவீதம் பேர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் சொத்து வாங்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.இது, இந்திய ரியல் எஸ்டேட் துறை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பவதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
சொத்து வாங்க இருப்பதாக தெரிவித்த இந்த 76 சதவீதம் பேரில், 89 சதவீதம் பேர், ஆடம்பர வீடு, நகர்ப்புற பங்களா, விடுமுறைக்கால வீடு போன்றவற்றை வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
26 சதவீதம்
மீதமுள்ள 11 சதவீதம் பேர், பிரீமியம் வர்த்தக ரியல் எஸ்டேட் சொத்துக்களை வாங்க இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.ஆய்வில் பங்கேற்றவர்களில் 26 சதவீதம் பேர், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தங்களுடைய வாழ்க்கை முறையை மேம்படுத்திக் கொள்ளவும், சிறந்த முதலீட்டுக்காகவும், ரியல் எஸ்டேட் சொத்துக்களை வாங்கி இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|