செயற்கைக்கோள் பிராட்பேண்டு ‘பார்தி ஏர்டெல் ’ ஒப்பந்தம் செயற்கைக்கோள் பிராட்பேண்டு ‘பார்தி ஏர்டெல் ’ ஒப்பந்தம் ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2022
21:18

புதுடில்லி:அடுத்த இரண்டு ஆண்டுகளில், அதிக சொத்து மதிப்பு கொண்டவர்களில் 76 சதவீதம் பேர், 5 கோடி ரூபாய்க்கும் அதிமான மதிப்பு கொண்ட சொத்துக்களை வாங்க முன்வருவார்கள் என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
விருப்பம்
ஆடம்பர ரியல் எஸ்டேட் பிரிவில், முன்னணி தரகு நிறுவனமான ‘இந்தியா சதபேஸ் இன்டர்நேஷனல் ரியால்ட்டி’ நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாட்டில் உள்ள முக்கியமான எட்டு பெருநகரங்களில், அதிகம் சொத்து மதிப்புடையவர்களின், சொத்து வாங்கும் விருப்பம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் 76 சதவீதம் பேர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் சொத்து வாங்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.இது, இந்திய ரியல் எஸ்டேட் துறை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பவதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
சொத்து வாங்க இருப்பதாக தெரிவித்த இந்த 76 சதவீதம் பேரில், 89 சதவீதம் பேர், ஆடம்பர வீடு, நகர்ப்புற பங்களா, விடுமுறைக்கால வீடு போன்றவற்றை வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
26 சதவீதம்
மீதமுள்ள 11 சதவீதம் பேர், பிரீமியம் வர்த்தக ரியல் எஸ்டேட் சொத்துக்களை வாங்க இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.ஆய்வில் பங்கேற்றவர்களில் 26 சதவீதம் பேர், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தங்களுடைய வாழ்க்கை முறையை மேம்படுத்திக் கொள்ளவும், சிறந்த முதலீட்டுக்காகவும், ரியல் எஸ்டேட் சொத்துக்களை வாங்கி இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)