அதானி வில்மார் நிறுவனம் பங்கு விலையை அறிவித்தது அதானி வில்மார் நிறுவனம் பங்கு விலையை அறிவித்தது ...  வருமான வரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்படும் என நம்பிக்கை வருமான வரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்படும் என நம்பிக்கை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2022
20:27

மும்பை:இந்திய பங்குச் சந்தைகள், இந்த வாரத்தில், தொடர்ந்து நான்கு நாட்களாக சரிவைக் கண்டதை அடுத்து, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், கிட்டத்தட்ட 10.36 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளனர்.
வாரத்தின் இறுதி வர்த்தக நாளான நேற்று, பங்குகள் அதிகமாக விற்பனை செய்யப் பட்டதை அடுத்து, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 59 ஆயிரம் புள்ளிகளுக்கு சரிந்தது.அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிப்பதை அடுத்து, அதன் பிரதிபலிப்பு உலக சந்தைகளில் ஏற்பட்டது. அது இந்திய சந்தையையும் பாதித்தது.
இந்த மாதத்தில் மட்டும், அன்னிய முதலீட்டாளர்கள் 4,197 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். மாதத்தின் துவக்கத்தில், அன்னிய முதலீட்டாளர்கள் அதிக பங்குகளை வாங்கியபோதும், அடுத்த சில நாட்களிலேயே விற்பனையில் ஈடுபட்டனர். இது, சந்தையில் குறுகிய காலத்தில், வளர்ச்சிக்கான தடையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அடுத்த 30 நாட்களுக்கு பங்குச் சந்தையில் அதிக ஏற்ற – இறக்கங்கள் இருக்கக்கூடும் என சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.எனவே, சில்லரை முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் அதிக வேகம் காட்ட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகளவில், ஆசிய சந்தைகளான ஹாங்காங், சியோல், ஷாங்காய், டோக்கியோ ஆகிய சந்தைகளும் நேற்று சரிவில் முடிந்தன. ஐரோப்பிய சந்தைகளும் சரிவையே சந்தித்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)