பதிவு செய்த நாள்
21 ஜன2022
20:27
மும்பை:இந்திய பங்குச் சந்தைகள், இந்த வாரத்தில், தொடர்ந்து நான்கு நாட்களாக சரிவைக் கண்டதை அடுத்து, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், கிட்டத்தட்ட 10.36 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளனர்.
வாரத்தின் இறுதி வர்த்தக நாளான நேற்று, பங்குகள் அதிகமாக விற்பனை செய்யப் பட்டதை அடுத்து, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 59 ஆயிரம் புள்ளிகளுக்கு சரிந்தது.அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிப்பதை அடுத்து, அதன் பிரதிபலிப்பு உலக சந்தைகளில் ஏற்பட்டது. அது இந்திய சந்தையையும் பாதித்தது.
இந்த மாதத்தில் மட்டும், அன்னிய முதலீட்டாளர்கள் 4,197 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். மாதத்தின் துவக்கத்தில், அன்னிய முதலீட்டாளர்கள் அதிக பங்குகளை வாங்கியபோதும், அடுத்த சில நாட்களிலேயே விற்பனையில் ஈடுபட்டனர். இது, சந்தையில் குறுகிய காலத்தில், வளர்ச்சிக்கான தடையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அடுத்த 30 நாட்களுக்கு பங்குச் சந்தையில் அதிக ஏற்ற – இறக்கங்கள் இருக்கக்கூடும் என சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.எனவே, சில்லரை முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் அதிக வேகம் காட்ட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகளவில், ஆசிய சந்தைகளான ஹாங்காங், சியோல், ஷாங்காய், டோக்கியோ ஆகிய சந்தைகளும் நேற்று சரிவில் முடிந்தன. ஐரோப்பிய சந்தைகளும் சரிவையே சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|