பதிவு செய்த நாள்
01 பிப்2022
09:53
புதுடில்லி : நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், நாட்டின் கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி 35 சதவீதம் அதிகரித்துள்ளது என, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி 35 சதவீதம் அதிகரித்து, 45 ஆயிரத்து 750 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.கடந்த டிசம்பர் மாதத்தில்மட்டும், ஏற்றுமதி 28 சதவீதம் உயர்ந்து உள்ளது. அமெரிக்கா, சீனா, ஜப்பான், வியட்னாம், தாய்லாந்து ஆகிய ஐந்து நாடுகளுக்கு, அதிக அளவில் ஏற்றுமதிஆகியுள்ளது.
கடல்சார் பொருட்கள் ஏற்றுமதியில், உறைந்த இறால் அதிகளவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மொத்த ஏற்றுமதி மதிப்பில், 74 சதவீதத்தை உறைந்த இறால் பிடித்துள்ளது. உறைந்த மீன் ஏற்றுமதி 7 சதவீதத்தை பிடித்து உள்ளது.வரும் ஆண்டுகளில், 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மீன்பிடி ஏற்றுமதி, கூடுதலாக 70 லட்சம் டன் மீன் உற்பத்தி, 55 லட்சம் வேலைவாய்ப்பு ஆகியவற்றை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|