பதிவு செய்த நாள்
01 பிப்2022
21:16
புதுடில்லி:'ஐ.எச்.எஸ்., மார்கிட் இந்தியா' எனும் நிறுவனம்,உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளை சேர்ந்த, 400 நிறுவனங்களின், ஜனவரி மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதில், ஜனவரி மாதத்தில் கொரோனா புதிய அலையானது, வளர்ச்சியை தடை செய்து, வணிக நம்பிக்கையை பாதித்ததால், உற்பத்தி மிதமான வளர்ச்சியையே பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஜனவரியில், நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி குறியீடு 54.0 புள்ளிகளாக உள்ளது. இது, இதற்கு முந்தைய டிசம்பர் மாதத்தில் 55.5 புள்ளிகளாக இருந்தது.
மேலும் கடந்த செப்டம்பர் மாதத்துக்கு பிறகு, அதிக சரிவை ஜனவரி மாதம் சந்தித்துள்ளது.பி.எம்.ஐ., குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும்; 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும். இந்த வகையில் வளர்ச்சி காணப்பட்டாலும், தொற்றுநோய் பரவல் உள்ளிட்ட காரணங்களால் வளர்ச்சி அதன் வேகத்தை இழந்துள்ளது.
மேலும், உள்ளீட்டு பொருட்கள் விலை அதிகரிப்பும் தயாரிப்பாளர்களை பாதித்து வருகிறது. ஒட்டு மொத்த வணிக நம்பிக்கை 19 மாதங்களில் இல்லாத வகையில் குறைந்துள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|