பதிவு செய்த நாள்
01 பிப்2022
21:58
விமான எரிபொருளின் விலை விமான எரிபொருளின் விலை, வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. 8.5 சதவீதம் அதிகரித்து, 1 கிலோ லிட்டர் 86 ஆயிரத்து, 38 ரூபாயை எட்டியுள்ளது.கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்த நிலை ஏற்பட்டதை அடுத்து, விமான கட்டணங்களும் அதிகரிக்க கூடும் என்ற அச்சம் பயணியரிடம் ஏற்பட்டுள்ளது.
என்.எம்.டி.சி., உற்பத்தி உயர்வு
பொதுத்துறை நிறுவனமான என்.எம்.டி.சி., நிறுவனத்தின் உருக்கு தாது உற்பத்தி, நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில், 28 சதவீதம் அதிகரித்துள்ளது.மேலும், இந்நிறுவனத்தின் விற்பனையும் 25 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனத்துக்கு மானியம்
மின்சார வாகனங்களை வாங்குவதற்கு, 15 சதவீத மானியத்தை, ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு 15 சதவீதம் அல்லது, அதிகபட்சம் 5,000 ரூபாய் வரை மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.மூன்று சக்கர வாகனத்துக்கு, அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் வரையிலும், நான்கு சக்கர வாகனத்துக்கு, அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரையிலும் மானியம் வழங்கப்படும்.
கரூர் வைஸ்யா வங்கி
கரூர் வைஸ்யா வங்கியின் நிகர லாபம், கடந்த டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், பல மடங்கு அதிகரித்து, 185 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மிதமான மின் நுகர்வு
கடந்த ஜனவரியில், நாட்டின் மின்சார நுகர்வு கிட்டத்தட்ட 2.6 சதவீதம் அளவு மட்டுமே அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றை முன்னிட்டு, பல மாநில அரசுகள் கட்டுப்பாடு களை விதித்ததை அடுத்து, மின்சார நுகர்வு குறைந்துவிட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|