பதிவு செய்த நாள்
09 பிப்2022
22:38
புதுடில்லி:டில்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி, ‘அமேசான்’ நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு பியூச்சர் குழுமத்திற்கு, உச்ச நீதிமன்றம் ‘நோட்டீஸ்’ அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
பியூச்சர் நிறுவனத்தின் சில்லரை விற்பனை வணிக பங்குகளை, 24 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு வாங்க ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இதை எதிர்த்து அமேசான் தொடர்ந்த வழக்கை மத்திய தீர்ப்பாயக் குழு விசாரித்து வருகிறது. இந்த விசாரணைக்கு, டில்லி உயர் நீதிமன்றம் ஜன., 5ல் தடை விதித்தது.
இந்த தடையை நீக்கக்கோரி அமேசான் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, அமேசான் தாக்கல் செய்திருக்கும் மனுவுக்கு பதில் அளிக்குமாறு, பியூச்சர் குழுமத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன் இவ்வழக்கு விசாரணை, வரும் 23ம் தேதி முதல் ஒத்தி வைக்கப்படாமல் தொடர்ந்து விசாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|