பதிவு செய்த நாள்
12 பிப்2022
23:50
புதுடில்லி:அண்மையில், இந்திய உள்நாட்டு சந்தையிலிருந்து விலகி விட்ட, ‘போர்டு மோட்டார்’ நிறுவனம், மீண்டும் புதிய முயற்சியில் இறங்கி உள்ளது.
மத்திய அரசின், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தின் கீழ், முதலீடு செய்ய போர்டு நிறுவனம் முன்வந்துள்ளது. தற்போது இத்திட்டத்தின் கீழ் இந்நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.இதையடுத்து, இந்தியாவில் இருக்கும் அதன் ஆலைகளை, மின்சார வாகன தயாரிப்புக்கு பயன்படுத்த திட்டமிடுகிறது.
இந்திய சந்தையிலிருந்து நிறுவனம் விலகிவிட்டதாக அறிவித்திருந்தாலும், இதன் வசம், இன்னும் இரண்டு ஆலைகள் இந்தியாவில் உள்ளன.இவற்றில் ஒரு ஆலையை, மின்சார வாகன உற்பத்திக்கு பயன்படுத்தி, இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்த வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக, இந்நிறுவனம் தெரிவித்துஉள்ளது.
இந்திய சந்தையில் தன்னுடைய தயாரிப்புகளை விற்பனை செய்வதை போர்டு நிறுவனம் நிறுத்தி விட்டதை அடுத்து, அதன் ஆலைகளை வாங்குவதற்கு வேறு சில நிறுவனங்கள் முயற்சி செய்து வந்தன.இந்நிலையில், போர்டு நிறுவனம், இந்த ஆலைகளில் மின்சார வாகனங்களை தயாரிக்கும் எண்ணத்துக்கு தற்போது வந்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|