பதிவு செய்த நாள்
13 பிப்2022
19:48
கிரெடிட் கார்டு எளிதான பணம் செலுத்தும் வசதியாக இருப்பதோடு, ரிவார்டு புள்ளிகள், கேஷ்பேக் சலுகை, தள்ளுபடி உள்ளிட்ட பலவிதமான பலன்களையும் அளிக்கின்றன. அதே நேரத்தில் கிரெடிட் கார்டு மிகை பயன்பாடு கடன் வலையில் சிக்க வைக்கும் அபாயமும் இருக்கிறது. எனவே கிரெடிட் கார்டை கவனமாக பயன்படுத்துவது மிகவும் அவசியம். அந்த வகையில் கிரெடிட் கார்டு பயன்பாடு தொடர்பாக பரவலாக காணப்படும் தவறான எண்ணங்களையும், அவற்றில் இருந்து விடுபடும் வழிகளையும் பார்க்கலாம்.
குறைந்த தொகை:
ரெடிட் கார்டு பில் மீது குறைந்த பட்ச தொகையை செலுத்தினால் கட்டணத்தை தவிர்க்கலாம் என பலரும் நினைக்கின்றனர். இதன் வாயிலாக, பணம் செலுத்துவதை தவறவிடுவதை தவிர்க்கலாம். ஆனால், நிலுவைத்தொகைக்கு வட்டி விதிக்கப்படும் என்பது மட்டும் அல்ல, இந்த காலத்தில் வட்டி இல்லா சலுகை பொருந்தாது.
ரொக்க வசதி:
தேவை எனில், கிரெடிட் கார்டு வாயிலாக ஏ.டி.எம்., வசதி மூலம் ரொக்கம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இது மிகவும் செலவு மிக்க கடனாகும். இதற்கு அதிக வட்டி உண்டு என்பது மட்டும் அல்ல, குறிப்பிட்ட கட்டணமும் வசூலிக்கப்படும். மேலும் இந்த காலத்தில் வட்டி இல்லா சலுகையையும் இழக்க வேண்டும்.
சரியான கார்டு:
ஒரு சில கிரெடிட் கார்டுகள் ஆண்டு கட்டணம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், கட்டணத்தை விட கிரெடிட் கார்டு அளிக்கும் பலன்கள் பயனாளியின் செலவு பழக்கத்திற்கு ஏற்றதாக அமைந்திருப்பதே முக்கியம். எனவே கார்டு பலன்களை முதன்மையாக கருத வேண்டும்.
கிரெடிட் ஸ்கோர்:
பயன்படுத்தாத கிரெடிட் கார்டை ஒப்படைத்து கணக்கை முடிப்பது கிரெடிட் ஸ்கோரை உயர்த்த உதவும் என கருதப்படுகிறது. ஆனால், கார்டை ஒப்படைப்பது மறைமுகமாக கிரெடிட் வரலாற்றை பாதிக்கும். மாறாக, கிரெடிட் கார்டைபூஜ்ஜியம் பேலன்சுடன் இயக்கத்தில் வைத்திருப்பது கிரெடிட் ஸ்கோர் வலுப்பெற உதவும்.
சலுகை காலம்:
கிரெடிட் கார்டுகள் வழங்கும் வட்டி இல்லாத சலுகை காலம், பில்லிங் முறையுடன் தொடர்புடையது. மாதாந்திர பில்லிங் அடிப்படையில், துவக்கத்தில் வாங்கும் பொருட்களுக்கு மட்டுமே, முழு சலுகை காலம் பொருந்தும். அதன் பின், பில்லிங் தினத்திற்கு ஏற்ப சலுகை நாட்கள் குறையும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|