பதிவு செய்த நாள்
15 பிப்2022
10:27
மும்பை : ‘டாடா’ குழுமத்தின் ‘ஹோல்டிங்’ நிறுவனமான ‘டாடா டிரஸ்ட்ஸ்’ மற்றும் ‘டாடா சன்ஸ்’ ஆகிய இரண்டிற்கும், தனித்தனி தலைவர்கள் இருக்க வேண்டும் என, டாடா குழுமம் முடிவு செய்துள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத்தில், 66 சதவீத பங்குகளை வைத்திருக்கும் டாடா டிரஸ்ட்ஸ் தலைவராக, ரத்தன் டாடா உள்ளார். டாடா டிரஸ்ட் மற்றும் டாடா சன்ஸ் ஆகிய இரண்டிற்கும் தலைவராக இருந்த ரத்தன் டாடா, 75 வயதை எட்டியவுடன், டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு, டாடா டிரஸ்ட்ஸின் தலைவராக உள்ளார்.
இந்நிலையில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக, கடந்த வாரம் மீண்டும் என். சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார். இவர் 5 ஆண்டுகள் இந்த பதவி வகிப்பார்.இந்நிலையில் தனித்தனி தலைவர்கள் என்பது, டாடா குழும வாரிசுகளுக்கான திட்டமிடலின் ஒரு பகுதியாகும் என கூறப்படுகிறது.
ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரரான நோயல் டாடா, கடந்த வாரம் ‘சர் டோராப்ஜி டாடா டிரஸ்ட்’ல் சேர்ந்தார். இது, டாடா குடும்பத்தின் அடுத்த தலைமுறை, டாடா டிரஸ்ட்களில் நுழைவதைக் குறிப்பதாக இருக்கிறது என்கிறார்கள்.
‘ஏர் இந்தியா’வுக்கு புதிய அதிகாரி‘ஏர் இந்தியா’வின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக, ‘துருக்கி ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் முன்னாள் தலைவரான இல்கர் அய்சி, நியமிக்கப்பட்டுள்ளார்.இல்கர் அய்சியை நியமிப்பது குறித்து டாடா குழுமத்தின் நிர்வாக குழு நேற்று மதியம் கூடியது. டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் சிறப்பு அழைப்பாளராக இதில் கலந்து கொண்டார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|