பதிவு செய்த நாள்
16 பிப்2022
07:09
மத்திய அரசு ‘செமி கண்டக்டர்’ துறைக்கு 76,000 கோடி ரூபாய் ஊக்கச் சலுகை அறிவித்ததைத் தொடர்ந்து, ஏராளமானோர் இத்துறைக்கு வர விண்ணப்பித்துள்ளதாக மத்திய மின்னணு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
நேரடி விற்பனை நிறுவனமான ஆம்வே இந்தியா, ஊட்டச்சத்துகள், தாவரங்கள் மற்றும் மூலிகை உணவுப் பொருட்கள் ஆய்விற்கு மும்பை, இந்திய தொழில்நுட்ப மையத்துடன் இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்துள்ளது.
உலகின் அனைத்து துறைகளும் மின்னணுமயமாகி வருவதால் ‘ஐ.டி.,’ எனப்படும் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுவது புதிய உச்சத்தை எட்டும் என, ‘நாஸ்காம்’ தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இயங்கும் அன்னிய நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களாக கருதப்படுவதை தடுக்க, நிறுவன சட்டத்தை திருத்தக் கோரி, பொறியாளர் அமைப்பின் ‘மாஜி’ தலைவர் கே.கே.கபிலா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த ஹிர்னந்தானி குழுமம், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் ‘டெஸ் பிளாட்பார்ம்ஸ்’ என்ற நிறுவனம் வாயிலாக பொழுது போக்கு, மின்னணு வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|