பதிவு செய்த நாள்
17 பிப்2022
21:31
புதுடில்லி:கடந்த ஆண்டில், எட்டு முக்கியமான நகரங்களில், வீடுகள் விலை 3–7 சதவீதம் அதிகரித்துள்ளதாக, சொத்து தரகு நிறுவனமான ‘பிராப்டைகர் டாட் காம்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, குழும தலைமை செயல் அதிகாரி துருவ் அகர்வாலா கூறியதாவது: முக்கியமான எட்டு நகரங்களில், கடந்த ஆண்டில், வீடுகள் விலை 3 – 7 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.விற்பனை 13 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் மொத்தம் 2.06 லட்சம் வீடுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. தொற்று நோய் அலைகள், அதற்கான அரசின் கட்டுப்பாடுகள் ஆகியவற்றையும் மீறி, குடியிருப்பு ரியல் எஸ்டேட் விற்பனை அதிகரித்துள்ளது.
ஆமதாபாத், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் அதிகபட்சமாக 7 சதவீதம் அளவுக்கு விலை அதிகரித்துள்ளது. சென்னையில் வீடுகள் விலை, 5 சதவீதம் உயர்ந்துள்ளது. விற்பனையை பொறுத்தவரை, ஆமதாபாதில் அதிகபட்சமாக 39 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னையில் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|