பதிவு செய்த நாள்
22 பிப்2022
19:55
புதுடில்லி:‘ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க்’ நிர்வாக இயக்குனர் வைத்தியநாதன், தனது பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வீடு கட்டிக் கொள்வதற்காக, 9 லட்சம் பங்குகளை, பரிசாக வழங்கி உள்ளார்.
தன்னுடைய பயிற்சியாளர், டிரைவர், வீட்டு உதவியாளர் என மொத்தம் ஐந்து பேருக்கு இந்த பங்குகளை பரிசாக வழங்கி உள்ளார்.3.95 கோடி ரூபாய்வைத்தியநாதன் பரிசாக வழங்கிய பங்குகளின் மதிப்பு, கிட்டத்தட்ட 3.95 கோடி ரூபாய்.
பங்குகளை பெற்ற ஐவரும், எந்த வகையிலும் வங்கியின் உயர் அதிகாரிகளுடன் சம்பந்தம் இல்லாதவர்கள். முழுக்க, தன்னுடைய தனிப்பட்ட விருப்பத்தின் பேரில், இவர்களுக்கு இந்த பரிசை வைத்தியநாதன் வழங்கி உள்ளார்.வீடு கட்டிக் கொள்வதற்காக அவர் இந்த பரிசை வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து, வங்கி தரப்பிலிருந்து ஒழுங்கு முறை அமைப்புகளுக்கு தகவல் வழங்கப்பட்டு உள்ளது.அதில், மூன்று லட்சம் பங்குகளை பயிற்சியாளர் ரமேஷ் ராஜூவுக்கும், தலா இரண்டு லட்சம் பங்குகளை வீட்டு உதவியாளர் பிரஞ்சல் நர்வேகர் மற்றும் டிரைவர் அழகர்சாமி சி முனாபர் ஆகியோருக்கும் வைத்தியநாதன் பரிசாக வழங்கி உள்ளார்.
அறக்கட்டளை
மேலும், அலுவலக உதவி ஊழியர் தீபக் பதாரே மற்றும் வீட்டு உதவியாளர் சந்தோஷ் ஜோகலே ஆகியோருக்கு, தலா ஒரு லட்சம் பங்குகளையும் பரிசாக வழங்கி உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு பங்கின் விலை 43.90 ரூபாய் என்ற நிலையில், இவற்றின் மதிப்பு 3.95 கோடி ரூபாய் ஆகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது
.இவை தவிர, ‘ருக்மணி சமூக நல அறக்கட்டளை’ வாயிலாக, சமூக பணிகளுக்காக, 2 லட்சம் பங்குகளும் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.வைத்தியநாதன் இதற்கு முன்பும் பல முறை அவரிடம் இருந்த பங்குகளை, உதவி செய்யும் வகையில், சம்பந்தமில்லாத பல தனிநபர்களுக்கு பரிசாக வழங்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க்’ நிர்வாக இயக்குனர் வைத்தியநாதன், பரிசாக வழங்கிய ஒரு பங்கின் விலை 43.90 ரூபாய் என்ற நிலையில், அவற்றின் மதிப்பு 3.95 கோடி ரூபாய் ஆகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|