ஆயிரம் சந்தேகங்கள்: எல்.ஐ.சி., பாலிசிதாரர்களுக்கு 'டிமேட்'  கட்டாயம் தேவையா?ஆயிரம் சந்தேகங்கள்: எல்.ஐ.சி., பாலிசிதாரர்களுக்கு 'டிமேட்' கட்டாயம் ... ...  புதிய பங்கு வெளியீடு 3 நிறுவனங்களுக்கு அனுமதி புதிய பங்கு வெளியீடு 3 நிறுவனங்களுக்கு அனுமதி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
உதவியாளர்கள் வீடு கட்டிக்கொள்ள பங்குகளை பரிசாக வழங்கிய அதிகாரி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2022
19:55

புதுடில்லி:‘ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க்’ நிர்வாக இயக்குனர் வைத்தியநாதன், தனது பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வீடு கட்டிக் கொள்வதற்காக, 9 லட்சம் பங்குகளை, பரிசாக வழங்கி உள்ளார்.
தன்னுடைய பயிற்சியாளர், டிரைவர், வீட்டு உதவியாளர் என மொத்தம் ஐந்து பேருக்கு இந்த பங்குகளை பரிசாக வழங்கி உள்ளார்.3.95 கோடி ரூபாய்வைத்தியநாதன் பரிசாக வழங்கிய பங்குகளின் மதிப்பு, கிட்டத்தட்ட 3.95 கோடி ரூபாய்.
பங்குகளை பெற்ற ஐவரும், எந்த வகையிலும் வங்கியின் உயர் அதிகாரிகளுடன் சம்பந்தம் இல்லாதவர்கள். முழுக்க, தன்னுடைய தனிப்பட்ட விருப்பத்தின் பேரில், இவர்களுக்கு இந்த பரிசை வைத்தியநாதன் வழங்கி உள்ளார்.வீடு கட்டிக் கொள்வதற்காக அவர் இந்த பரிசை வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து, வங்கி தரப்பிலிருந்து ஒழுங்கு முறை அமைப்புகளுக்கு தகவல் வழங்கப்பட்டு உள்ளது.அதில், மூன்று லட்சம் பங்குகளை பயிற்சியாளர் ரமேஷ் ராஜூவுக்கும், தலா இரண்டு லட்சம் பங்குகளை வீட்டு உதவியாளர் பிரஞ்சல் நர்வேகர் மற்றும் டிரைவர் அழகர்சாமி சி முனாபர் ஆகியோருக்கும் வைத்தியநாதன் பரிசாக வழங்கி உள்ளார்.


அறக்கட்டளை
மேலும், அலுவலக உதவி ஊழியர் தீபக் பதாரே மற்றும் வீட்டு உதவியாளர் சந்தோஷ் ஜோகலே ஆகியோருக்கு, தலா ஒரு லட்சம் பங்குகளையும் பரிசாக வழங்கி உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு பங்கின் விலை 43.90 ரூபாய் என்ற நிலையில், இவற்றின் மதிப்பு 3.95 கோடி ரூபாய் ஆகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது
.இவை தவிர, ‘ருக்மணி சமூக நல அறக்கட்டளை’ வாயிலாக, சமூக பணிகளுக்காக, 2 லட்சம் பங்குகளும் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.வைத்தியநாதன் இதற்கு முன்பும் பல முறை அவரிடம் இருந்த பங்குகளை, உதவி செய்யும் வகையில், சம்பந்தமில்லாத பல தனிநபர்களுக்கு பரிசாக வழங்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க்’ நிர்வாக இயக்குனர் வைத்தியநாதன், பரிசாக வழங்கிய ஒரு பங்கின் விலை 43.90 ரூபாய் என்ற நிலையில், அவற்றின் மதிப்பு 3.95 கோடி ரூபாய் ஆகிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)