பதிவு செய்த நாள்
26 பிப்2022
21:51
புதுடில்லி:உலக எரிசக்தி சந்தையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும்; தேவைப்படும்பட்சத்தில், சேமிப்பு இருப்பிலிருந்து வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்துஉள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து, உலக சந்தையில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 105 டாலரை தாண்டியது. இந் நிலையில், உலக சந்தையில் மேலும் விலை அதிகரிக்கும்பட்சத்தில், தேவைப்பட்டால், அரசு தன்னுடைய இருப்பிலிருந்து, எண்ணெயை வெளியிட்டு விலை பாதிப்பை சமன் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படுமா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.இந்தியா, கிட்டத்தட்ட 3.90 கோடி பேரல் கச்சா எண்ணெயை, சேமிப்பு இருப்பாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|