ஆயிரம் சந்தேகங்கள் எல்.ஐ.சி., பாலிசி வைத்திருக்கும்  எல்லாருக்கும்  பங்குகள் கிடைக்குமா?ஆயிரம் சந்தேகங்கள் எல்.ஐ.சி., பாலிசி வைத்திருக்கும் எல்லாருக்கும் ... ...  பிப்ரவரி ஜி.எஸ்.டி., வசூல் 1.33 லட்சம் கோடி ரூபாய் பிப்ரவரி ஜி.எஸ்.டி., வசூல் 1.33 லட்சம் கோடி ரூபாய் ...
புதிய இலக்குடன் தமிழ்நாட்டில் நுழைந்த ‘டன்ஸோ டெய்லி’ சேவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2022
18:47

இந்தியாவின் முன்னணி ‘துரித விற்பனை மற்றும் கன்வீனியன்ஸ் ஸ்டோர்ஸ்’ நிறுவனமான டன்ஸோ, தனது மளிகைப் பொருட்கள் டெலிவரி செய்யும் ‘டன்ஸோ டெய்லி’ சேவையை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. முதல் கட்டமாக சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவை தொடர்ந்து அடுத்தடுத்த நகரங்களுக்கும் செல்லவிருக்கிறது.

அதிநவீன தொழில்நுட்ப நெட்வொர்க் முறையில் இயங்கும் சிறிய கிடங்குகளின் மூலம் ஆர்டர்களை 2 நிமிடத்திற்குள் செயல்படுத்தி, ‘டன்ஸோ டெய்லி’ மளிகை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை 15 முதல் 20 நிமிடத்திற்குள் உடனடியாக டெலிவரி செய்கிறது. உள்ளூர் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கும் விதத்தின் அடிப்படையில், ‘டன்ஸோ டெய்லி’ அவர்களது தினசரி மற்றும் வாராந்திர தேவைகளை தேர்வு செய்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் வேகமாகவும் வசதியாகவும் ஆர்டர் செய்ய முடியும்.

2021ஆம் ஆண்டு பெங்களூருவில் துவங்கப்பட்டதிலிருந்து, ‘டன்ஸோ டெய்லி’யின் மாதாந்திர ஆர்டர்களின் எண்ணிக்கை 1 மில்லியனாக வளர்ந்துள்ளது. தற்போது சென்னை மற்றும் புனேவில் இந்த சேவை விரிவாக்கப்படவிருப்பதை அடுத்து இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்இல் டன்ஸோ செயலியின் மூலம் இந்த சேவையை பெறலாம். டன்ஸோ டெய்லி சேவை இந்தியாவின் முதல் 10 முக்கிய நகரங்களில் 2022ஆம் ஆண்டின் முதல் பாதிக்குள் வெளியிடப்படவுள்ளது.

சென்னையில், டன்ஸோ டெய்லி 15க்கும் அதிகமான சிறிய கிடங்குகளுடன் தனது செயல்பாடுகளை மேற்கொள்வதால், நகரை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் தினசரி தேவைகளை உடனடியாக டெலிவரி செய்ய முடியும். சென்னையில் இதன் பணிகளை மேற்கொள்ள ஒரு முழுமையான குழுவை உருவாக்க டன்ஸோ திட்டமிட்டுள்ளது, அதில் 35 சதவிகிதம் பேர் பெண்களாக இருப்பார்கள், என்று டன்ஸோ நிறுவனத்தின், தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனருமான கபீர் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)