பதிவு செய்த நாள்
01 மார்2022
23:00
மேலும் சரியும் முதலீடுகள்
இந்திய மூலதன சந்தையில், ‘பி நோட்ஸ்’ எனும் பங்கேற்பு பத்திரங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் முதலீடு, கடந்த ஜனவரியில் சரிவைக் கண்டுள்ளது.இம்முதலீடு, ஜனவரியில் 87 ஆயிரத்து 989 கோடி ரூபாயாக சரிவைக் கண்டுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலை அடுத்து, இம்முதலீடு மேலும் குறையும் என்கிறார்கள் நிபுணர்கள்.
‘டாடா’ அழைப்புக்கு மறுப்பு
‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, ‘துருக்கி ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் இல்கர் ஐசிக்கு அழைப்பு விடப்பட்டிருந்த நிலையில், அதை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.
தேசத்தின் பாதுகாப்பு கருதி, அவர் பதவி ஏற்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கக் கூடாது என சில அமைப்புகள் தெரிவித்திருந்த நிலையில், இந்த முடிவுக்கு தான் வந்திருப்பதாக இல்கர் ஐசி தெரிவித்துள்ளார்.
பதவி விலகினார் குரோவர்
நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக, ‘பாரத்பே’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஷ்னீர் குரோவர் மற்றும் அவர் மனைவி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், குரோவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.நிதி முறைகேடுகள் விவகாரம் குறித்து, நிறுவனத்தின் நிர்வாக குழு கூடி விவாதிக்க இருப்பது தெரியவந்த நிலையில், அவர் இம்முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
தனியார் விற்பனை அதிகரிப்பு
பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிதி சாரா தனியார் நிறுவனங்களின் விற்பனை, நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், 25.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இது, இதற்கு முந்தைய காலாண்டில் 31.8 சதவீதமாகவும்; முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 4 சதவீதமாகவும் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
ஊடக வணிகத்தில் அதானி
‘அதானி’ குழும தலைவரான கவுதம் அதானி, ஊடகத் துறை வணிகத்திலும் இறங்கி உள்ளார். டிஜிட்டல் வணிக செய்திகள் நிறுவனமான, ‘குவின்டில்லியன் பிசினஸ் மீடியா’ நிறுவனத்தின் சிறுபான்மை பங்குகளை வாங்கி உள்ளார்.அதானி நுழைந்ததை அடுத்து, அமெரிக்காவை சேர்ந்த ‘புளூம்பெர்க் மீடியா’, ‘புளூம்பெர்க்குவின்ட்’ கூட்டு வணிகத்திலிருந்து வெளியேறுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|