பதிவு செய்த நாள்
08 மார்2022
19:53
புதுடில்லி:‘ஹெக்ஸகான் நியுட்ரிஷன்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.
மும்பையை சேர்ந்த இந்நிறுவனம், ஊட்டச் சத்து பொருட்கள் தயாரிப்பு, ஆராய்ச்சி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.இந்நிறுவனம் ‘பென்டாஷ்யூர், ஒபிஸிகோ, பீடியாகோல்டு’ உள்ளிட்ட பல பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறது.புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதன் வாயிலாக, இந்நிறுவனம் 600 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே, ‘பிளிப்கார்ட்’ நிறுவனத்தின் துணை நிறுவனரான சச்சின் பன்சாலின் ‘நவி டெக்னாலஜிஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வர இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக 4 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|