பதிவு செய்த நாள்
08 மார்2022
20:19
புதுடில்லி:கச்சா எண்ணெய் விலை, ஒரு பீப்பாய்க்கு 300 டாலர் வரை அதிகரிக்கும் என ரஷ்யா அதிர்ச்சி கொடுத்துள்ளது.
அதாவது கிட்டத்தட்ட, 23 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது.தற்போது ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 127 டாலராக இருக்கும் நிலையில், இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக, அமெரிக்கா தெரிவித்ததை அடுத்து, ரஷ்யா இவ்வாறு அறிவித்துள்ளது.
ரஷ்ய எண்ணெயை நிராகரிக்கும்பட்சத்தில், அது உலக சந்தையில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்ய துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு பீப்பாய் 300 டாலருக்கும் அதிகமாக கூட விலை ஏறலாம் என தெரிவித்து உள்ளார்.இதற்கிடையே, இந்தியாவில், 1 லிட்டர் பெட்ரோல், டீசல் விலை 15 ரூபாய் வரை அதிகரித்தால் மட்டுமே, எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தை தவிர்க்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|