பதிவு செய்த நாள்
12 மார்2022
19:31
கடந்த 35 ஆண்டுகளாக வெற்றிகரமாக விவசாயம், கட்டுமானம் மற்றும் தொழிற்துறை போன்ற துறைகளுக்கான சிறப்பு டயர் பிரிவுகளில் கவனம் செலுத்தி வரும் பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (பிகேடி) நிறுவனம் அதன் பிராண்ட் தூதராக ரன்வீர் சிங்கை அறிவித்துள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் ஐந்து டயர் உற்பத்தித் தளங்கள் மற்றும் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் மூன்று வணிகப் பிரிவுகளுடன் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ஆப்-ஹைவே டயர் துறையில் உலகப் புகழ்பெற்ற நிறுவனமாக உள்ளது. இந்திய பன்னாட்டுக் குழுமம் மற்றும் ஆப்-ஹைவே டயர் சந்தையில் உலகளாவிய நிறுவனமாக இயங்கி வருகிறது.
புதிய விளம்பர தூதர் குறித்து பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்துன் கூட்டு நிர்வாக இயக்குநர் ராஜிவ் போதார் கூறுகையில், முற்றிலும் கடின உழைப்பு மற்றும் தனித்துவத்தின் மூலம் தன்னை ஒரு முன்னனி நட்சத்திரமாக நிலைநிறுத்திக் கொண்டுள்ள புகழ்பெற்ற இளைஞரான ரன்வீர் சிங்-குடன் இணைந்து எங்கள் பிராண்டு கூட்டாண்மையை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியா முழுவதும் எங்களின் தனித்துவமான சலுகைகள் குறித்த விழிப்புணர்வை பன்மடங்கு பெருக்க ரன்வீர் பெரிதும் உதவிகரமாக இருப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். இன்னும் வரவிருக்கும் பல்லாண்டுகளுக்கு அவருடன் ஒரு வெற்றிகரமான கூட்டணியை எதிர்பார்க்கிறோம். எங்கள் பிராண்டைப் பிரபலப்படுத்த இவர் ஒரு சிறந்த தேர்வாகும், என்றார்.
பிகேடி டயர்ஸ்-இன் பிராண்டு தூதராக தனது புதிய பங்களிப்புக் குறித்து ரன்வீர்சிங் கூறுகையில், நான் பிகேடி டயர்ஸ்-ஐ பிரதிநிதித்துவப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைவதுடன், "குரோயிங் டுகெதெர்" என்ற அவர்களின் பொன்மொழிக்கேற்ப, ஒரு பிரகாசமான சிறந்த எதிர்காலத்தை நோக்கி உருவாக்கி வளர்க்கும் இந்த உணர்வை ஏற்றுக்கொள்வதென்பது என்னுள் நிரம்பியுள்ளது. ஆகவே, பிகேடி-இன் உலகம் மற்றும் அதன் பெருமைகளுடன் இணைந்திருப்பதில் நானும் மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|