பதிவு செய்த நாள்
12 மார்2022
20:14
புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய தனியார் துறை வங்கியான எச்.டி.எப்.சி., வங்கியின், டிஜிட்டல் வணிகம் தொடர்பான அனைத்து தடைகளையும், ரிசர்வ் வங்கி நீக்கியுள்ளது.
இது குறித்து, எச்.டி.எப்.சி., வங்கி தெரிவித்துள்ளதாவது:வங்கியின், ‘டிஜிட்டல் 2.0’ திட்டத்தின் அடிப்படையிலான அனைத்து வணிக முயற்சிகள் குறித்த தடைகளும் நீக்கப்பட்டு விட்டதாக, ரிசர்வ் வங்கி, கடந்த 11ம் தேதி கடிதத்தின் வாயிலாக அறிவித்துள்ளது.தடையை நீக்கியதற்காக, ரிசர்வ் வங்கிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ரிசர்வ் வங்கியின் ஆலோசனைகளை முழுமையாக ஏற்று, மிக உயர்ந்த தர நிலைகள் கடை பிடிக்கப்படும் என நிறு வனம் உறுதியளிக்கிறது.மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்க இருப்பதில், மகிழ்ச்சி அடைகிறோம்.இவ்வாறு தெரிவித்து உள்ளது.
தொழில்நுட்பம் சார்ந்த பிரச்னைகள் காரணமாக, ரிசர்வ் வங்கி, கடந்த 2020ல், எச்.டி.எப்.சி., வங்கியின் டிஜிட்டல் 2.0 திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து வணிக முயற்சிகளுக்கும் தடை விதித்தது. மேலும், புதிய கிரெடிட் கார்டு வழங்குவதற்கும் தடை விதித்தது.பின், கடந்த ஆண்டு ஆகஸ்டில், கிரெடிட் கார்டுகள் வழங்க, ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது. தற்போது அனைத்து விதமான தடைகளையும் நீக்கி உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|