வருமான வரி  ‘ரீபண்டு’ 1.86 லட்சம் கோடி ரூபாய் வருமான வரி ‘ரீபண்டு’ 1.86 லட்சம் கோடி ரூபாய் ...  இந்தியாவில் ஸ்டோர்கள் அமைக்க ‘வால்மார்ட்’ விரும்பவில்லை இந்தியாவில் ஸ்டோர்கள் அமைக்க ‘வால்மார்ட்’ விரும்பவில்லை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
தொடர் பங்கு வெளியீடு ‘ருச்சி சோயா’ அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2022
20:15

புதுடில்லி:சமையல் எண்ணெய் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ‘ருச்சி சோயா’ நிறுவனம், 4,300 கோடி ரூபாயை திரட்டும் வகையில், தொடர் பங்கு வெளியீட்டுக்கு, 24ம் தேதியன்று வருகிறது.

ருச்சி சோயா நிறுவனம், பாபா ராம்தேவ் தலைமையிலான, ‘பதஞ்சலி’ நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.ருச்சி சோயாவின் தொடர் பங்கு வெளியீடு, இம்மாதம் 24ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிறுவனம், கடந்த ஆண்டு ஜூனில், தொடர் பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக விண்ணப்பித்திருந்தது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’, அனுமதி வழங்கியது.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் 25 சதவீத பங்குகள், பொது பங்குகளாக இருக்க வேண்டும் என விதிமுறை உள்ளதால், இந்நிறுவனம், அதை பூர்த்தி செய்யும் விதமாக, தற்போது தொடர் பங்கு வெளியீட்டுக்கு வருகிறது.பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் தொகையை நிலுவையில் உள்ள கடன்களை அடைக்கவும், நடைமுறை மூலதன செலவுகளுக்கும், பொது நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டில், பதஞ்சலி நிறுவனம், ருச்சி சோயாவை கையகப்படுத்தியது. தற்போது புரமோட்டர்கள் வசம் 99 சதவீத பங்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)