பதிவு செய்த நாள்
12 மார்2022
20:15
புதுடில்லி:சமையல் எண்ணெய் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ‘ருச்சி சோயா’ நிறுவனம், 4,300 கோடி ரூபாயை திரட்டும் வகையில், தொடர் பங்கு வெளியீட்டுக்கு, 24ம் தேதியன்று வருகிறது.
ருச்சி சோயா நிறுவனம், பாபா ராம்தேவ் தலைமையிலான, ‘பதஞ்சலி’ நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.ருச்சி சோயாவின் தொடர் பங்கு வெளியீடு, இம்மாதம் 24ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிறுவனம், கடந்த ஆண்டு ஜூனில், தொடர் பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக விண்ணப்பித்திருந்தது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’, அனுமதி வழங்கியது.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் 25 சதவீத பங்குகள், பொது பங்குகளாக இருக்க வேண்டும் என விதிமுறை உள்ளதால், இந்நிறுவனம், அதை பூர்த்தி செய்யும் விதமாக, தற்போது தொடர் பங்கு வெளியீட்டுக்கு வருகிறது.பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் தொகையை நிலுவையில் உள்ள கடன்களை அடைக்கவும், நடைமுறை மூலதன செலவுகளுக்கும், பொது நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டில், பதஞ்சலி நிறுவனம், ருச்சி சோயாவை கையகப்படுத்தியது. தற்போது புரமோட்டர்கள் வசம் 99 சதவீத பங்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|