பதிவு செய்த நாள்
12 மார்2022
20:29
புதுடில்லி:கடந்த பிப்ரவரியில், வாகன விற்பனை முகவர்களுக்கான சப்ளை, 23 சதவீதம் சரிவைக் கண்டு உள்ளது என, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கமான ‘சியாம்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்து உள்ளதாவது:கடந்த பிப்ரவரியில், தொழிற்சாலைகளில் இருந்து, வாகன விற்பனை முகவர்களுக்கு செய்யப்படும் சப்ளை 23 சதவீதம் சரிந்து உள்ளது.பயணியர் வாகனங்கள் மற்றும் இருசக்கர, மூன்று சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை 2021 பிப்ரவரியில், 17.36 லட்சமாக இருந்தது.
நடப்பு ஆண்டு பிப்ரவரியில், 13.28 சதவீதமாக குறைந்து போனது.செமிகண்டக்டர் சிப் தட்டுப்பாடு தொடர்வது, அரசின் புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதால் அதிகரித்த தயாரிப்பு விலை, மூலப் பொருட்கள் விலை உயர்வு, சரக்கு போக்குவரத்து செலவு அதிகரிப்பு என பல அம்சங்கள், வாகன தயாரிப்பை கடுமையாக பாதித்துள்ளன. தற்போதைய போர் நிலவரம், உலகளவிலான சப்ளையில் மேலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இவ்வாறு தெரிவித்து உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|