ஊக்கத் தொகை திட்டத்தில் 75 நிறுவனங்களுக்கு அனுமதி ஊக்கத் தொகை திட்டத்தில் 75 நிறுவனங்களுக்கு அனுமதி ...  டாடாவின் சூப்பர் செயலி அடுத்த மாதம் அறிமுகமாகிறது டாடாவின் சூப்பர் செயலி அடுத்த மாதம் அறிமுகமாகிறது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஐந்து நாட்கள் ஏற்றத்துக்கு ஓய்வு கொடுத்த சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2022
22:12

மும்பை:கடந்த 5 நாட்களாக ஏற்றத்தில் இருந்த பங்குச் சந்தைகள், நேற்று சரிவைக் கண்டன. இதனால் முதலீட்டாளர்கள், நேற்று 2.61 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்தனர்.

உக்ரைன் மீதான போர், இன்னும் ஒரு முடிவுக்கு வராத காரணத்தினால், உலக சந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகின. அமெரிக்க மத்திய வங்கி, பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், 2018ம் ஆண்டுக்கு பிறகு முதன் முறையாக, வட்டிவிகிதத்தை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனாலும், உலக சந்தைகள் பாதிக்கப்பட்டன.

இதன் பிரதிபலிப்பு இந்திய சந்தையிலும் ஏற்பட்டது.இந்தியாவில், ரூபாய் மதிப்பு இழப்பு, அன்னிய முதலீடுகள் வெளியேறுவது ஆகியவை, சந்தையை பாதிப்பதாக அமைந்தன. மும்பை பங்குச் சந்தையின் ‘சென்செக்ஸ்’ பிரிவில், ‘டாடா ஸ்டீல்’ அதிக இழப்பை கண்டது.வாகன பங்குகள், குறிப்பாக, ‘மகிந்திரா அண்டு மகிந்திரா, மாருதி சுசூகி’ உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை உயர்வைக் கண்டன.

உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் 75 நிறுவனங்கள் தேர்தெடுக்கப்பட்ட அறிவிப்பு வந்ததை அடுத்து, வாகன துறை ஏற்றம் கண்டது.மும்பை பங்குச் சந்தையில் 2,045 பங்குகள் சரிவைக் கண்டன. 1,342 பங்குகள் ஏற்றம் பெற்றன. 101 நிறுவன பங்குகள் எந்த மாற்றத்தையும் சந்திக்கவில்லை.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)