பதிவு செய்த நாள்
17 மார்2022
01:46
விமான எரிபொருள் விலை உயர்வு
சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வால், விமான எரிபொருள் விலை, இதுவரை இல்லாத வகையில் ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.17,135 உயர்த்தப்பட்டு ரூ.1,10,666 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பரஸ்பர வர்த்தகம் பெருகும்
இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் அமலானதால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் பரஸ்பர வர்த்தகம், ரூ.45,000 கோடியில் இருந்து ரூ.7.50 லட்சம் கோடியாக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
‘டாடா ஸ்டார்பக்ஸ்’ விரிவாக்கம்
‘டாடா ஸ்டார்பக்ஸ்’ நிறுவனம், பெங்களுரு, கோவா உள்ளிட்ட ஆறு நகரங்களில், எட்டு விமான நிலையங்களில் சுவையான ஸ்டார்பக்ஸ் காபி கடைகளை திறக்க திட்டமிட்டு உள்ளது.அரசுக்கு தனி இயங்குதளம்மொபைல் போனுக்கு கூகுளின் ‘ஆண்ட்ராய்டு’, ஆப்பிளின் ‘ஐ.ஓ.எஸ்.,’ இயங்கு தளங்கள் உள்ளன.
அதுபோல மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை வடிவமைப்பு மற்றும் கண்டு பிடிப்புகளுக்கு தனி இயங்குதளம் உருவாக்கப்பட உள்ளதாக மத்திய மின்னணு துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சர்க்கரை ஏற்றுமதி உயரும்
இந்தாண்டு செப்., உடன் முடியும் நடப்பு சர்க்கரை பருவத்தில், நாட்டின் சர்க்கரை ஏற்றுமதி, 40 லட்சம் டன் அதிகரித்து, 75 லட்சம் டன்னாக உயரும் என, இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் மதிப்பிட்டுள்ளது.
40 உணவுக் கூடங்கள் ஒப்படைப்பு
ஐ.ஆர்.சி.டி.சி., எனும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், ரயில் நிலையங்களில் அமைந்துள்ள, 40 உணவுக் கூடங்களை நடத்த யாரும் முன்வராததால் அவற்றை திரும்பவும் ரயில்வே துறையிடம் ஒப்படைத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|